India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தது. பில் சால்ட் 5 ரன், சுனில் நரேன் 8, ரகுவன்சி 13, ஸ்ரேயஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சற்றுமுன்பு வரை, 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.
மார்ச் மாதத்தில் அதிக சந்தாதாரர்களை புதிதாக ஜியோ நிறுவனம் சேர்த்துள்ளது. நாட்டின் முன்னணி
நிறுவனமாக விளங்கும் ஜியோ, மார்ச்சில் மட்டும் 21 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதற்கு அடுத்து அதிகபட்சமாக ஏர்டெல் நிறுவனம் 17 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. அதேநேரத்தில், வோடாஃபோன் நிறுவனம் 6.84 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக TRAI தெரிவித்துள்ளது.
பவல் தலைமையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அணியில், பவல் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப் (துணை கேப்டன்), ரசல், நிக்கோலஸ் பூரன், ரூதர்ஃபோர்ட், ஷெப்பர்ட், சார்லஸ், சேஸ், ஹெட்மயர், ஹோல்டர், ஹோப், அகீல் ஹோசன், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், மோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி கோப்பையைக் கைப்பற்றுமா?
கடும் வெயிலின் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதலில் ஒரு முட்டையின் விலை ₹20 காசுகள் உயர்ந்து ₹4.80க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் முட்டை விலை ₹65 காசுகள் உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சில்லரை விற்பனை விலை உயர்ந்து, 1 முட்டை ₹6 – ₹7 வரை விற்பனையாகிறது.
தென்தமிழக கடல்பகுதிகளில் நாளை கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரித்துள்ளது. கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் நாளை காலை 2.30 மணி முதல் நாளை மறுநாள் இரவு 11.30 மணி வரை பலத்த காற்று வீசுமென்று தெரிவித்துள்ளது. கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரைகளில் படகுகள் மோதி சேதமடையும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. துஷாரா வீசிய முதல் ஓவரிலேயே, சால்ட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, அவர் வீசிய இரண்டாவது ஓவரின் 2ஆவது பந்தில், ரகுவன்ஷியும்(13), கடைசிப் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரும் (6) ஆட்டமிழந்தனர். தற்போது, KKR 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது.
கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்றார். கனடாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், மிக இளம் வயதில் (17வயது) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். குகேஷ் சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
காந்தி குறித்த குஜராத் முன்னாள் எம்எல்ஏ இந்திரனில் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பரப்புரையில் பேசிய அவர், “ராகுல் அடுத்த மகாத்மா காந்தியாக உருவெடுப்பார். காந்தி சற்று தந்திரக்காரராக இருந்தார். ஆனால், ராகுல் காந்தி முற்றிலும் வெளிப்படையானவர்” எனக் கூறியிருந்தார். இவரின் பேச்சை கண்டித்துள்ள பாஜக, காந்தியை அவமானப்படுத்திய காங்கிரஸை, மக்கள் தேர்தலில் தண்டிப்பார்கள் என்று கூறியுள்ளது.
உலகக் கோப்பை டி20 அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வானதற்கு முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் பாண்டியாவுக்கு சிறப்பாக இல்லை என்ற அவர், பாண்டியா இந்தியாவுக்கு கோப்பைகளை பெற்றுக்கொடுத்ததை மறக்க கூடாது என்றார். மேலும், சேசிங்கின் போது கோலி-பாண்டியா ஆட்டம் சிறப்பாக இருக்குமெனவும் தெரிவித்தார். பாண்டியா தேர்வு குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சித்திருந்தனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.