India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீர் நிலைகளை பாதுகாக்காமல், ஏரி, குளங்களை திமுகவினர் ஆக்கிரமித்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அணைகளை தூர்வாராததால் முழு கொள்ளளவில் நீரைத் தேக்க முடியவில்லை என விமர்சித்த அவர், குழுவை அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாடு பாலைவனமாகும் வரை திமுக காத்திருக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான், இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை கருத்தில் கொண்டு, அந்நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களை கவனமாக இருக்கும்படி மத்திய அரசு மீண்டும் எச்சரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை உற்று கவனித்து வருவதாகவும், 2 நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுவதால், அந்நாடுகளுக்கு செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக பந்து வீசிய துஷாரா 3, பும்ரா 3, பாண்டியா 2, பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 70, மனிஷ் பாண்டே 42 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து MI அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்கலம் சாலை பகுதியில் வாகன சோதனையின்போது, கஞ்சா பாக்கெட்டுடன் விற்ற இருவர், வாங்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சோதனையில், அது வெறும் மாட்டு சானம் என்று தெரியவந்தது.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நிதானமாக ஆடிவரும் கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் கடந்துள்ளார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், பொறுமையாக ஆடிவரும் அவர், ஐபிஎல்லில் தனது 9ஆவது அரை சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது வரை, KKR 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. வெங்கடேஷ் ஐயர் 51*, மனிஷ் பாண்டே 36* ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், நாளை முதல் (மே 4) ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் மே 28ஆம் தேதி வரை நீடிக்க நீடிக்கும் என்பதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
சொந்த நாட்டிற்காக விளையாட செல்வதால் CSK அணியில் இருந்து விலகியுள்ள முஸ்தஃபிசுர் ரஹ்மான், சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தோனியைப் போன்ற அனுபவம் வாய்ந்த லெஜெண்டுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறிய அவர், தோனியின் அறிவுரைகளை எப்போதும் மனதில் வைத்திருப்பேன் என்றார். மேலும், உங்களை மீண்டும் சந்திக்கவும், சேர்ந்து விளையாடவும் ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கதை சொல்வதில் பிரதமர் மோடி வல்லவர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் பிரதமரின் இல்ல நிகழ்ச்சிக்கு அழைப்பில்லாமலேயே சென்று, அவரை கட்டியணைத்தது மோடிதான் என்றும், அப்படியிருக்கையில், ராகுல் காந்தி பிரதமராக வேண்டுமென்று பாகிஸ்தான் விரும்புவதாக மோடி கூறுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தது. பில் சால்ட் 5 ரன், சுனில் நரேன் 8, ரகுவன்சி 13, ஸ்ரேயஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சற்றுமுன்பு வரை, 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.
மார்ச் மாதத்தில் அதிக சந்தாதாரர்களை புதிதாக ஜியோ நிறுவனம் சேர்த்துள்ளது. நாட்டின் முன்னணி
நிறுவனமாக விளங்கும் ஜியோ, மார்ச்சில் மட்டும் 21 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இதற்கு அடுத்து அதிகபட்சமாக ஏர்டெல் நிறுவனம் 17 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. அதேநேரத்தில், வோடாஃபோன் நிறுவனம் 6.84 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக TRAI தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.