India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடக அரசியலில், பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகார் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தனது தந்தை தேவகவுடா மற்றும் தாயார் சென்னம்மா ஆகியோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். பாலியல் விவகாரத்தில் ரேவண்ணா குடும்பத்தார் பாவச் செயல் செய்வதாகக் குற்றம்சாட்டிய முதல்வர் சித்தராமையாவுக்கு பதில் அளித்த அவர், முதல்வருக்கு மனிதாபிமானம் இல்லை எனக் கூறினார்.
இதுவரை நடந்த IPL போட்டிகளில் பேட்டிங் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் பவுலர்கள் கவனம் ஈர்த்தனர். முதலில் பேட்டிங் செய்த KKR அணி, MI பந்துவீச்சாளர்களின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால், வெங்கடேஷ் ஐயரின் நிதானமான ஆட்டத்தால் அந்த அணி 169 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய MI, சூர்யகுமார் (46), டிம் டேவிட் (24) தவிர, மீதமுள்ள 8 விக்கெட்டுகளும் 75 ரன்களுக்கு வீழ்ந்தது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. ஏற்கெனவே கோடை வெயில் உச்சம் தொட்டுள்ள நிலையில், இன்று தொடங்கும் கத்தரி வெயில் மே 29-ஆம் தேதி வரை நீடிக்கும். இதனால், வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்குமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேநேரம், கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் என்பது விஞ்ஞானக் கணக்கல்ல. அது பஞ்சாங்கக் கணக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர், தொடர் தோல்விப் படங்களால் தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவரை, ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி அவர் பகிர்ந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி. உலகைச் சுற்றி ஞானப்பழத்தை பெரும் போட்டியில் பெற்றோரிடம் கோபம் கொண்டு இங்கு வந்த முருகன், பக்தர்களுக்கு தண்டாயுதபாணியாகக் காட்சி அளிக்கிறார். இந்த சிலையை போகர் எனும் சித்தர், நவபாஷாணத்தால் உருவாக்கினார். பழனி முருகன் கோயிலின் தனிச் சிறப்பாக விளங்கும் பஞ்சாமிர்தம், நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.
பிரஜ்வால் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் கைது செய்து அழைத்து வருவோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அவரை மத்திய அரசு பாதுகாப்பதாகவும், இவ்விவகாரம் தெரிந்தும் JDS கட்சியுடன் பாஜக கூட்டணியைத் தொடருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவர் இந்த ஐபிஎல்லில் இருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது CSKவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்சென் விபத்தில் 2 கைகளை இழந்தபோதும் மனம் தளராமல், கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார். ஆனால், லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி அவரது கார் வடிவமைப்பில் சில மாற்றம் செய்து, கால்கள் மூலம் கார் ஓட்டி காட்டியதால் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
RCB-GT இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரு அணி, எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி, இன்று குஜராத் அணியை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்துமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.23ஆம் தேதி வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், நாளை ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில், அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது.
Sorry, no posts matched your criteria.