India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்திற்கான உண்மைக் காரணத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 30ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
நெல்லை காங்., மாவட்ட செயலாளர் மரணத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை தினமும் சுட்டிக்காட்டுவதாகவும், தற்போது தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவரே சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் எனவும் கொந்தளித்துள்ளார். இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் செயல்படுமாறு அவர் முதல்வரை கேட்டுகொண்டார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அங்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை & மேட்டுப்பாளையம் பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணமாக பெரியவர்களுக்கு ₹100, சிறுவர்களுக்கு ₹50 வசூலிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும் ஏழைகள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதாகவும், ஏழ்மையைக் கண்டவரால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங். செயலாளர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நெல்லை விரைந்துள்ளனர். 2 நாள்களுக்கு முன் மாயமான அவர், இன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, கொலை மிரட்டல் புகார் அளித்திருந்த நிலையில், அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
த.செ.ஞானவேல், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை இன்று தனது இன்ஸ்டாவில் அமிதாப் பகிர்ந்துள்ளார். அதில், ரஜினி மிகவும் எளிமையான மனிதர் என்றும், அவர் சற்றும் மாறாமல் முன்பு பழகியது போலவே தற்போதும் இருப்பதாக நெகிழ்ந்துள்ளார். அத்துடன், மீண்டும் அவருடன் நடிப்பது பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மே 7, 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7ஆம் தேதி, தேனி, திண்டுக்கல் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும், 8ஆம் தேதி திருப்பூர், விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார், ஏப். 30ஆம் தேதி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் என புகார் அளித்து 4 நாள்கள் ஆகியும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், அவரை உயிருடன் மீட்டிருக்க முடியும். காவல்துறையின் மெத்தனப் போக்கிற்கு என்ன காரணம், அரசியல் அழுத்தமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மோடியால் சாமானிய மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் பிரசாரம் செய்த அவர், மக்கள் பிரச்னைகளை கேட்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் 4,000 கி.மீ. பயணம் செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், உடலில் சிறு தூசி கூட படாமல் மாளிகையில் வசிக்கும் மோடி, மக்கள் பிரச்னையை எப்படி புரிந்துக் கொள்வார் என்று கேள்வி எழுப்பினார்.
தீ விபத்து & மீட்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எண்ணன்ற உயிர்களைப் பாதுகாக்க ராணுவம் போல 24*7 களத்தில் நின்று பணியாற்றும் மீட்புப் பணி வீரர்களை சமூகம் குறைத்து மதிப்பிடுகிறது என்பது கசப்பான உண்மை. காடு, மலை, வெயில், மழை என பார்க்காமல் மக்களுக்காக கடமையாற்றும் இந்த வீரர்களை போற்றுவோம்.
Sorry, no posts matched your criteria.