India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடும் வெயில் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், கோவை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால், 30 ஆண்டுகளில் முதன்முறையாக நீலகிரியில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
▶1818 – சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்
▶1916 – இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் பிறந்த நாள்
▶1955 – மேற்கு ஜெர்மனி முழு விடுதலை அடைந்தது.
▶1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
▶சர்வதேச மருத்துவச்சிகள் தினம்
ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி மீண்டும் கைப்பற்றியுள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்புத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் கோலி (542), ருதுராஜ் (509), சாய் சுதர்சன் (424) ஆகியோர் உள்ளனர்.
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளை கடந்த மார்ச் 15ஆம் தேதியுடன் நிறுத்திய நிலையில், அந்நிறுவனத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாகவும், பேடிஎம் நிறுவனத்திற்கு எப்போதும் தனது ஆதரவு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். நேற்று தனது குடும்பத்துடன் அயோத்திக்கு சென்று ராமர் கோயிலில் கரிசனம் செய்தார். அதன்பின்னர் பேசிய அவர், நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்துள்ளனர் என்றார். அயோத்தியில் திரளான மக்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 139
▶குறள்: ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்..
▶பொருள்: தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
இந்தியாவில் தற்போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் தற்போதைய சூழலை பார்க்கும்போது தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ எனத் தோன்றுவதாகக் கூறினார். மேலும் பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசி, மதவாதப் பிரச்னையை எழுப்பப் பார்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் சொதப்பிய பெங்களூரு அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. குஜராத்துடனான போட்டி தொடங்கும் முன் புள்ளிப் பட்டியலில் கடைசி (10) இடத்தில் இருந்த RCB, நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் RCB பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.
இன்று (மே 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்., மூத்த தலைவர் ராகுல் காந்தி, இது வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான தாக்குதல் என்றார். மேலும், உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்திய அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்வதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.