India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், INDIA கூட்டணியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்., அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், முடிவில் குளறுபடி இருந்தால் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேவை ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
T20 உலகக் கோப்பைக்காக மொத்தம் ₹93,51,23,062 கோடி பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் அணிக்கு ₹20.3 கோடியும், 2ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ₹10.6 கோடியும் பரிசாக வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹6.5 கோடி, இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹3.1 கோடி, 9 -12ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையவர்கள் ₹4 கோடி எடுத்து சென்ற போது பிடிபட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மனை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு பதில் முன்னதாகவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
7,755 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 2024 கணக்கீடு படி, மொத்த 2,000 ரூபாய் தாள்களில் 97.82% நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது. வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றுவதற்கான கால அளவு முடிந்து 8 மாதங்களான நிலையில், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
வட இந்தியாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்துள்ளதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக 47 டிகிரி செல்சியஸை தாண்டாத வெயில், இம்முறை 52 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. இதன் எதிரொலியாக, Heatstroke ஏற்பட்டு ஒடிஷாவில் 99 பேரும், உத்தர பிரதேசத்தில் தேர்தல் பணியாளர்கள் 33 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டும் என மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்று எண்ணிக்கைக்கு முன், தபால் வாக்கு எண்ணிக்கையின் மொத்த விவரங்கள் வெளியாகும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதியுடன் முடிவுபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
தபால் வாக்குகள் தொடர்பான ஆந்திர தேர்தல் அதிகாரியின் சுற்றறிக்கையை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தபால் வாக்கு படிவத்தில் சான்றளிக்கும் அதிகாரியின் பதவி குறிப்பிடாமல், கையொப்பம் மட்டும் இருந்தாலே, அந்த வாக்கு செல்லும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது மோசடிக்கு வித்திடும் என ஒய்எஸ்ஆர் காங்., வழக்கு தொடுத்திருந்தது.
ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, உலகக் கோப்பையில் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெய்ஸ்வாலின் தற்போதைய ஃபார்ம் வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், கோலி தொடக்க வீரராக ஆடும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காக பொறுமையாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். T20 WCஇல் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
Sorry, no posts matched your criteria.