News May 5, 2024

ஜெயக்குமார் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

image

மறைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் ஜெயக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

News May 5, 2024

யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

ஜெயக்குமார் மரணம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஒரு குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஜெயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியின் பின்னணியில் இருந்தாலும், தொழிலதிபராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

News May 5, 2024

ஹர்திக் பாண்ட்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

GT அணிக்கு எதிரான 55ஆவது லீக் சுற்றுடன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் MI அணி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வீரேந்தர் சேவாக், “தோல்வி குறித்து பாண்ட்யா போன்ற வீரர்களிடம் என்ன நடந்தது என்று MI அணியின் உரிமையாளர் கேள்வியெழுப்ப வேண்டும். அத்துடன் கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவரிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

News May 5, 2024

அரசு மருத்துவனையில் மேலும் ஒரு அவலம்

image

மேட்டூர் அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் உதவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று அப்பகுதியில் விபத்தில் சிக்கிய இருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அச்சமயம் மருத்துவமனையில் மின்சாரமும் இல்லை, மருத்துவர்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், செவிலியர்கள் டார்ச் லைட்டில் முதலுதவி அளித்து சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 5, 2024

மும்பையைப் போல மேட்டூரிலும் அவலம்

image

இரு தினங்களுக்கு முன் மும்பை அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்ததால் தாயும் குழந்தையும் உயிரிழந்த சோகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மேட்டூர் அரசு மருத்துவமனையில் அதேபோல டார்ச் லைட் வெளிச்சத்தில் செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மின்சாரம் துண்டான நேரத்தில் ஜெனரேட்டரை இயக்குபவர்கள் மருத்துவமனயில் இல்லாததே இந்நிலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

News May 5, 2024

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை

image

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. அணையை சர்வதேச குழுவை கொண்டு சோதனை செய்ய வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆய்வு செய்ய புதிய குழு எதுவும் தேவையில்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்தது. அத்துடன், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிடுமாறும் வலியுறுத்தியது.

News May 5, 2024

சம்பளத்தைக் குறைத்த சிவகார்த்திகேயன்

image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘SK23’ படத்தின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகிறது. பிசினஸ் கணக்குகளைச் சொல்லி, அக்ரிமென்ட்டில் போடப்பட்ட சம்பளத்தைக் குறைக்கும்படி, இருவரிடமும் தயாரிப்புத் தரப்பு கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. நெருக்கடியைப் புரிந்துகொண்ட இருவரும், சம்பளத்தைக் குறைத்ததோடு, செலவினைக் கட்டுப்படுத்த இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர்.

News May 5, 2024

சிக்கன் விலை உயர்ந்தது

image

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று உணவில் சிக்கன் இல்லாமல் இருக்காது. அதனால், சிக்கன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) 1 கிலோ விலை ₹127க்கு விற்பனையாகிறது. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக கடந்த வாரம் ₹119க்கு விற்பனையான நிலையில், 1 வாரத்தில் விலை ₹8 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் பல இடங்களில் 1 கிலோ ₹250-280 வரை விற்பனையாகிறது.

News May 5, 2024

சுரைக்காய் மோர் சர்பத் செய்வது எப்படி?

image

வெயிலில் ஏற்படும் அலர்ஜி போன்ற தோல் பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் சுரைக்காய்க்கு உண்டாம். கோடையில் அதிகமாக கிடைக்கும் சுரைக்காயில் மோர் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். தோல் சீவி எடுத்து நறுக்கிய சுரைக்காய், இஞ்சி, வெள்ளரி, கொத்தமல்லி, மிளகாய், பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் மோரை ஊற்றினால் சுவையான சுரைக்காய் மோர் சர்பத் ரெடி.

News May 5, 2024

ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

image

மர்மமான முறையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மரண வாக்குமூலம் தொடர்பான கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விகாரம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!