India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் 1.57 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 1.20 லட்சம் வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 62,020 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி 32,096 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிட்டார். அவர் 2.22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரசின் விகாஸ் தாக்ரே 1.82 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் நிதின் கட்கரி, 39 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேற்குவங்க மாநிலம் அசோன்சோலில் திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா 36,000 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1.85 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் தங்கவேல் 1.39 லட்சம் வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 33,409 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 33,384 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 94,392 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்) – 87,390 வாக்குகள்
ராதிகா சரத்குமார் (பாஜக) – 34,463 வாக்குகள்
கெளசிக் (நாதக) – 18,885 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9இல் பதவியேற்க உள்ளார். ஆட்சியமைக்கத் தேவையான 88 இடங்களைத் தாண்டி, TDP தற்போது 134 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பது, உறுதியாகியுள்ளது. போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 இடங்களில் ஜன சேனா முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராக அமரக்கூடும் எனத் தெரிகிறது.
ராமநாதபுரத்தில் போட்டியிட்ட Ex CM ஓபிஎஸ் உள்பட 5 ஓபிஎஸ்-களும் பின்னடவை சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில், IMUL வேட்பாளர் நவாஸ் கனி 89,278 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். Ex CM ஓபிஎஸ் 50,323 வாக்குகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். இதேபோல ஒச்சப்பன் பன்னீர்செல்வம் – 416, ஒய்யாதேவர் பன்னீர்செல்வம் – 206, ஒய்யாரம் பன்னீர்செல்வம் – 157, ஒச்சாதேவர் பன்னீர்செல்வம் – 79 வாக்குகள் பெற்றுள்ளனர்.
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.29 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 83,058 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 50,820 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மணிவாசகன் 15,435 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
பஞ்சாப்பின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும் ’வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் போட்டியிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நாட்டின் இருபெரும் (NDA & INDIA) கூட்டணிகளுக்கு தலைவலி அளிக்கும் போட்டியாளராக களத்தில் உள்ளார். சிறையில் இருக்கும் அவர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. குமரியில் நாம் தமிழர் கட்சி 3ஆவது இடம் பிடித்த நிலையில், அதிமுக 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ஆவது இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்காசியில் நாம் தமிழர் தற்போது வரை 64,000 வாக்குகளை பெற்றுள்ளது.
கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் காங்., ஆட்சியமைப்பதற்கு அடித்தளமாக இருந்த சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவர் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் உள்ளார். இதனால் அவர், தமிழ்நாடு காங்கிரஸின் எதிர்காலம் என சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.