India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் (சிபிஎம்) – 2,41,805 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சரவணன் (அதிமுக) – 1,20,357 வாக்குகள்
ராம சீனிவாசன் (பாஜக) – 1,17,593 வாக்குகள்
சத்யா தேவி (நாம் தமிழர்) – 52,439 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ம.பி முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், விதிஷா தொகுதியில் 4,88,548 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட பிரதாப்பானு ஷர்மாவை விட 3,67,157 அதிகம் பெற்றுள்ள அவர், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து களம் கண்ட சிபிஐ வேட்பாளர் சுனில் குமாரை 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இதன் மூலம் அங்கு பாஜகவின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் 11.1% வாக்குகள் பெற்ற பாஜக, 2019 தேர்தலில் 28.2% வாக்குகள் பெற்று கேரளாவில் பலத்தை அதிகரித்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என பாஜக தலைவர்கள் பெரும் நம்பிக்கையுடன் கூறி வந்தனர். இதை எதிர்க்கட்சியினர் திட்டவட்டமாக மறுத்தனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தற்போதைய நிலவரப்படி, 292 தொகுதிகளிலேயே முன்னிலை வகிக்கிறது. இதன் அடிப்படையில் தேர்தல் முடிவை பாஜக தவறாக கணித்ததா, இல்லை அதீத நம்பிக்கையினால் கணிப்பு பொய்த்ததா என மக்கள் வினவுகின்றனர்.
நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 1,43,911 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சுர்ஜித் சங்கர் (அதிமுக) – 83,024 வாக்குகள்
கார்த்திகா (நாதக) – 42,162 வாக்குகள்
ரமேஷ் (பாஜக) – 28,808 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆந்திராவின் கடப்பா மக்களவைத் தொகுதியில் காங்., வேட்பாளர் YS ஷர்மிளா, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி YSR கட்சியின் அவினாஷ் ரெட்டி முன்னிலையில் உள்ள நிலையில், தெலுங்கு தேசம் வேட்பாளர் சுப்புராம ரெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். ஷர்மிளா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சொந்த அண்ணனான ஜெகனுக்கு எதிராக, காங்கிரசில் இணைந்து அவர் அரசியலில் களமாடி வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 93,821 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் தமிழ் மணி 90,660 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 18,511 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 18,229 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 9 தொகுதிகளில் 3ஆம் இடத்தில் உள்ளது. தருமபுரியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி மட்டும் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல் & இரண்டாம் இடங்களில் உள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 2,12,876 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சிவநேசன் (தேமுதிக) – 88,338 வாக்குகள்
முருகானந்தம் (பாஜக) – 72,909 வாக்குகள்
ஹுமாயின் கபீர்(நாதக) – 54,889 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கடும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக குக்கி இன மக்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் இடையே நடைபெறும் பிரச்சனைகளில் பாஜக அரசு பாராமுகமாக இருப்பதாகவும் மேலும், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றும் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. அதனைத் தொடர்ந்து மணிப்பூரில் 2 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லவுள்ளது.
Sorry, no posts matched your criteria.