India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இமாச்சலின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, திரைத்துறையை விட்டு விலகுவீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தன்னிடம் பல படங்கள் கைவசம் இருப்பதாகவும், தற்போதைக்கு திரையுலகை விட்டு விலக முடியாது எனவும் தெரிவித்தார். மண்டி தொகுதியில் வெற்றி பெற காங்., தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
UPI மூலம் பணம் செலுத்துவது எளிதாக இருப்பதால், டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருப்பினும், இவை நுகர்வோரின் செலவை பெருமளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிறது. ஐஐடி டெல்லி சார்பில், 276 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 74% பேர் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் அதிகமாகச் செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர். UPI பேமெண்ட்டால் உங்கள் செலவு அதிகரித்ததா?
பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் காங்கிரஸுக்கு எதிராக தினமும் பொய் பிரசாரம் செய்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கிடையாதென காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்த அளவை அதிகரிப்போம் என்றுதான் காங்கிரஸ் கூறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தங்களது 1 வயது மகனை (அங்கத்) மைதானத்திற்கு அழைத்து வந்திருந்தார். ஹைதராபாத் வீரர் அபிஷேக் வர்மாவின் விக்கெட்டை பும்ரா வீழ்த்திய போது, அங்கத் கேமராவில் காட்டப்பட்டார். மகனின் புகைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், நேற்று முதல்முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அங்கத் கடந்தாண்டு செப்டம்பர் 4ஆம் தேதி பிறந்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் கோரிய வழக்கை, மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ஆம் தேதி, ED-யால் அவர் கைது செய்யப்பட்டார். தேர்தல் நேரம் என்பதால் ஜாமின் வழங்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது. முன்னதாக அவருக்கு ஜாமின் தர, ED எதிர்ப்பு தெரிவித்தது.
விவசாயிகள், வியாபாரிகள் என மக்களில் ஒவ்வொரு பிரிவினரும் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சைபாயில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மிக மோசமாகத் தோற்கப்போவதாகக் கூறினார். மேலும், பாஜக பல வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நிவின் பாலி, நயன்தாரா நடிக்கும் ‘டியர் ஸ்டூடென்ட்ஸ்’ என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்திற்கு பிறகு, இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். பள்ளிக்கூடத்தில் நடக்கும் காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை, நிவின் பாலி தயாரிக்கிறார்.
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் கைகள் உடைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியதில், வலது கை உடைந்ததாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் அளித்தார். அத்துடன், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் 1 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 39.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 45.88%, பிஹார் 36.69%, சத்தீஸ்கர் 46.14%, கோவா 49.04%, குஜராத் 37.83%, கர்நாடகா 41.59%, மத்திய பிரதேசம் 44.67%, மகாராஷ்டிரா 31.55%, உத்தரப் பிரதேசம் 38.12%, மேற்குவங்கம் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணையில், அக்கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரன் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். தனியார் இடத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜரான அவரிடம், மரண வாக்குமூல கடிதம் குறித்தும், இருவருக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உரிய பதிலளிக்க முடியாத அவர், ஜெயக்குமார் மரணத்தில் இருந்துதான் மீண்டு வரவில்லை என மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.