India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி, வெளிநாடு, உள்நாட்டு பயணம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஓய்வுக்கு பின், மாதம் ₹1.5 லட்சம் அளிக்கப்படும்.
நீட் தேர்வை அமெரிக்க நிறுவனம் நடத்துவது ஏன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். உயிர் தமிழுக்கு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவதை சுட்டிக்காட்டி, அதன்மூலம் போலி மருத்துவர்களே உருவாவதாக குற்றம்சாட்டினார். நீட் தேர்வை நடத்த அமெரிக்க நிறுவனம் ஏன்? இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் இல்லையா? என்றும் சீமான் கேள்வியெழுப்பினார்.
அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரசும், I.N.D.I.A. கூட்டணியும் தம்மை அர்ப்பணித்து கொண்டிருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அரசியல் ஆதாயத்துக்கு பாஜகவும், மோடியும் வெறுப்புணர்வை ஊக்குவிப்பதாகவும், ஆனால் காங்கிரசும், தாமும் சமூகத்தில் அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் போராடுவதாகவும் தெரிவித்தார்.
ராஜமவுலி இயக்கத்தில் 2022இல் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் படம், ரூ.1,100 கோடி வசூலித்தது. அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ஆஸ்கர் விருதும் வென்றது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையே வரவேற்பு கிடைத்து வருவதால், இப்படமும் வரும் 10ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
DC-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற RR அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி, எஞ்சி இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை டெல்லி அணி வீழ்த்துமா?
வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டு போடாமல் தடுக்க, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், என்.டி.ஏ கூட்டணி மக்களவையில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும்” எனக் கூறினார்.
தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (மே9) வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு, ‘அடங்காத அசுரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் எழுதி, இயக்கி, நடிக்கும் இந்தப் படத்தை, கலாநிதி மாறன் தயாரிக்கிறார். அசுரன், கர்ணன், வட சென்னை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷின் 50ஆவது திரைப்படம் ஆகும். வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேற்கு வங்க அரசுப்பள்ளி ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர். 25,000 ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 16 முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்தப் பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <
பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் போல DINK (Dual Income No Kids) என்ற வாழ்க்கை முறை தற்போது இந்தியாவில் ட்ரெண்டாகி வருகிறது. குழந்தை பெறாமல், சம்பாதிக்கும் பணத்தை சேமித்து, முதுமையைக் கழிப்பது தான் அதன் நடைமுறையாகும். முதுமைக் காலத்தில், நம்மை கவனிக்க குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் சுயநல சிந்தனைக்கு மாற்றாக, DINK-ஐ இந்த ஜோடிகள் ஆதரிக்கின்றனர். DINK-க்கு இந்தியாவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.