India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்திலும் அந்தக் கட்சி தனது வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. இதற்கு அதிமுக 3 அணியாக பிரிந்துள்ளதே காரணம் எனக் கூறப்பட்டாலும், முன்னதாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவையை அவசரமாக கூட்டுகிறார் பிரதமர் மோடி. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நாளை அமைச்சரவை கூடுகிறது. இதனால், என்ன முடிவு எடுக்கப் போகிறார் பிரதமர் என்று நாடே நாளைய தினத்தை நோக்கி காத்து கொண்டு இருக்கிறது. அமைச்சரவையை முழுவதுமாக கலைத்துவிட்டு மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 தேர்தலில் பாஜகவின் முக்கிய முழக்கங்களுள் ஒன்று ‘இந்தமுறை 400’ தொகுதிகளில் வெற்றி. அனைத்துப் பிரசார கூட்டங்களிலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த முழக்கத்தை எழுப்ப தவறியதில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் இதற்கு நேரெதிராக வெளிவந்துள்ளன. பாஜக கூட்டணி சுமார் 290 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது.
என்டிஏ மீது நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக தொடர் வெற்றியை மக்கள் அளித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் இது ஒரு பெரும் வெற்றி என்றும், அனைவரையும் தலைவணங்குவதாகவும் கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்த நற்பணிகளை மேலும் தொடருவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2ஆவது இடத்தையும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக அமைத்த வியூகம், முடிவுகளில் எதிரொலித்துள்ளது. நாடு முழுவதும் மோடியை முன்னிறுத்தி பாஜக பிரசாரம் செய்த நிலையில், மோடி எதிர்ப்பை முன்வைத்து திமுக பிரசாரம் செய்தது. நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக மக்களிடம் தெளிவான விவாதத்தை திமுக உருவாக்கியது. இவை அனைத்தும் திமுகவின் அபார வெற்றிக்கு கைக்கொடுத்துள்ளது.
திமுக 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவையில் வெற்றி பெற்றுள்ளது. 1996இல் திமுகவை சேர்ந்த மணிமாறன் கடைசியாக அந்த தொகுதியில் வென்றார். அதனை தொடர்ந்து 1999, 2004, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில், திமுக கூட்டணி கட்சிகளே அந்த தொகுதியில் வென்றன. நீண்ட நாட்களாக அந்த தொகுதியில் போட்டியிடாமல் இருந்த திமுக, தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஒடிஷா சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ரகுபர்தாஸ் அறிவித்துள்ளார். ஒடிஷா அமைச்சரவை கூட்டம் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் சற்றுமுன் கூடியது. அக்கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையை கலைக்கும் பரிந்துரை கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. ஒடிஷாவில் 77 இடங்களை வென்ற பாஜக, விரைவில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரசார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு தேர்தல் முடிவு சாதகமாக வந்திருப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது எனக் கூறி, “சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா” என்ற நீலமலைத் திருடன் திரைப்படத்தின் பாடல் வரியை சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் சிலரும் தோல்வி முகம் கண்டுள்ளனர். ஸ்மிருதி இரானி, ராஜிவ் சந்திரசேகர், அஜய் மிஸ்ரா, அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அமேதியில் கடந்த முறை ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, இம்முறை அதே தொகுதியில், நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவரான காங்கிரசின் கிஷோரி லாலிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.