India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிஎன்பி வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு செலுத்தாமல் தப்பிய அவரை இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2019இல் பிரிட்டன் அரசு கைது செய்தது. இதையடுத்து, பிரிட்டன் சிறையிலுள்ள அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்ட நிலையில், 5ஆவது முறையாக ஜாமின்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அருவிகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தலமாக விளங்குகின்றன. அதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம். 1)குற்றாலம் மெயின் அருவி 2) குற்றாலம் ஐந்தருவி 3)பாபநாசம் அருவி 4)காரையாறு பாண தீர்த்த அருவி 5)மணிமுத்தாறு அருவி 5) நாகர்கோவில் திற்பரப்பு அருவி 6)தேனி சுருளி அருவி 7) கொடைக்கானல் கும்பக்கரை அருவி 8)ஒகேனக்கல் அருவி 9)வால்பாறை குரங்கு அருவி
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி போராடி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்து. 222 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய RR 20 ஓவரில் 201/8 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலையில் RR அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்து.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிவந்த அவர் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் விளாசி 86 ரன்கள் அடித்தார். இது நடப்புத் தொடரில் சாம்சன் அடிக்கும் 5 ஆவது அரை சதமாகும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் குமார் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
*மேஷம் – பொறுமை தேவை
*ரிஷபம் – வெற்றி கிடைக்கும்
*மிதுனம் – மகிழ்ச்சியான நாள்
*கடகம் – ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்
*சிம்மம் – வளர்ச்சி ஏற்படும்
*கன்னி – தடை உண்டாகும்
*துலாம் – நினைத்தது நிறைவேறும்
*விருச்சிகம் – கவனமாக இருக்கவும்
*தனுசு – உறுதியுடன் செயல்படலாம்
*மகரம் – திட்டமிட்டு செயல்படவும் *கும்பம் – திருப்திகரமான நாள் *மீனம் – முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்
டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் கார் தொடர்ந்து 2 மாதங்களாக அதிக விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 17,547 பஞ்ச் கார்கள் விற்பனையானது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 19,158 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2ஆவது அதிகபட்சமாக மாருதி சுஜூகியின் வேகன் ஆர் மாடல் கார்கள் 17,850-ம், 3ஆவது அதிகபட்சமாக மாருதி சுஜூகியின் பிரஸ்ஸா எஸ்யுவி கார்கள் 17,113-ம் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், தி.மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும். இதனால், ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். 222 ரன்கள் இலக்கை துரத்தி வரும் RR அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக கேப்டன் சஞ்சு, 33 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 73 ரன்களை குவித்தார். RR அணி தற்போது வரை 13 ஓவர்களில் 135/3 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000, 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் நிலையில், இதுவரை 16 தவணைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 17ஆவது தவணைப் பணம் ஜூன் மாதம் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டி20 கிரிக்கெட் தொடரில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய அணி வீரர் என்ற பெருமையை சாஹல் தன்வசமாக்கினார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அவர், இன்றைய போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இதனிடையே, T20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.