India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி 2ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
* மேஷம் – சோர்வு ஏற்படும் , * ரிஷபம் – பகை உண்டாகும், *மிதுனம் – நன்மை தேடி வரும், *கடகம் – பெருமை தேடி வரும், * சிம்மம் – நட்பு வட்டம் உருவாகும், *கன்னி – பணம் வரவு இருக்கும், *துலாம் – புகழ் வெளிச்சம் கிடைக்கும், *விருச்சிகம் – தெளிவாக இருங்கள், *தனுசு – எதிர்பார்த்த உதவி கிடைக்கும், *மகரம் – முயற்சி செய்யுங்கள், *கும்பம் – பதவி உயர்வு கிடைக்கும், *மீனம் – வெற்றி உண்டாகும்.
ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தரணி வேந்தன், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 2ஆவது இடத்தையும், பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் பாக்கியலட்சுமி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2ஆவது இடத்தையும், பாமக வேட்பாளர் ஜோதி 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ்குமார் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ தொகுதிகளில் வெற்றி வாகை சூட உள்ள நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது பேசிய ஜெ.பி. நட்டா, நாட்டில் முதல் முறையாக ஒரு கூட்டணி 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாகவும், தங்களது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், கேரளாவில் கணக்கை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
400 தொகுதிகளில் தனித்து வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருந்த பாஜகவுக்கு மக்கள் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது வெற்றியா? தோல்வியா? என்பது தெரியாத அளவில் அது உள்ளது. 2014, 2019 தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வெற்றியுடன் ஒப்பிடுகையில், இம்முடிவு ஒரு வகையான தோல்வியாகும். 230+ தொகுதிகளை கைப்பற்றும் INDIA கூட்டணி ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், 29,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ் மணி 2ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் 2ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகம் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தனித்து களமாடிய நாம் தமிழர் கட்சி 36 லட்சம் வாக்குகளை நெருங்கியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய (30,41,717) வாக்குடன் ஒப்பிடுகையில் சுமார் 5 லட்சம் வாக்குகள் அதிகம். தூத்துக்குடி, தஞ்சை, பெரம்பலூர், இராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 8 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கு மேல் வாக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் 8% வாக்குடன் நாதக மாநில அந்துஸ்து பெறவுள்ளது.
தமிழ்நாட்டில் 12 மணி வரை 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், தேனி, தென்காசி, சென்னை, பெரம்பலூர், திருவள்ளூர், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கவனமாக செல்லவும்.
Sorry, no posts matched your criteria.