India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், 1.92 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 2ஆவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட நரசிம்மன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் வித்யா வீரப்பன் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாதக, தனது வாக்கு சதவிகிதத்தை 3%இல் இருந்து 6%ஆக உயர்த்தியது. இந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் பறிக்கப்பட்டு, மைக் சின்னம் வழங்கப்பட்டது. இதனால், அக்கட்சியின் வாக்கு வங்கி கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 6%லிருந்து 8%ஆக உயர்ந்து மாநில அந்தஸ்து பெறும் கட்சி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார், 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 2ஆவது இடத்தையும், பாமக சார்பில் போட்டியிட்ட முரளி சங்கர் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் பேச்சிமுத்து 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி, 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 2ஆவது இடத்தையும், பாமக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மனோஜ்குமார் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, 1.66 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கவேல் 2ஆவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கருப்பையா 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இன்று (ஜூன் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி
▶இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது
▶ஒடிஷா சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ரகுபர்தாஸ் அறிவிப்பு
▶28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் மீண்டும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
▶பாஜகவால் I.N.D.I.A கூட்டணியை உடைக்க முடியாது: மம்தா பானர்ஜி
▶கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 2ஆவது இடத்தையும், பாமக வேட்பாளர் கே.பாலு 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் அஃப்சியா நஸ்ரின் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்கிறது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. ஆளும் கட்சியான YSR காங்., வெறும் 10 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 2ஆவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் பசுபதி 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.