India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகத் தயாராகவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கையும் படமாகத் தயாராகவுள்ளது. கவினின் ‘ஸ்டார்’ படத்தை இயக்கியுள்ள இளன், இப்படத்தை இயக்க அவரிடம் ஒன் லைன் கதை சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார். இதனால், யுவன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
▶ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமன் மணலில் லிங்கம் செய்து வழிபட்ட ‘ராமேஸ்வரம், ஶ்ரீ ராமநாதசுவாமி கோயில்’ ▶கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் இருக்கும் ‘பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில்’ ▶அகநானூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களை எடுத்துரைக்கும் ‘திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில்’ ▶220 அடியில் பிரமாண்ட ராஜகோபுரத்தைப் பெற்றிருக்கும் ‘ஶ்ரீரங்கம், அரங்கநாதர் கோயில்’
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக நேற்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு சாதனை படைக்க இருந்தார். ஆனால், விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், பாரி புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 17ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை., உடன் இணைந்து கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில் இத்தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரம் (காலை 10 மணி வரை) 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின்துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா என பாமக தலைவர் அன்புமணி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்திற்கு 12 -16 மணி நேரம் மும்முனை மின்சாரமும், கடைமுனை நுகர்வோருக்குச் சீரான மின்சாரமும் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் என அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன், தமிழில் ’டாக்டர்’ படம் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து, ’டான்’, ’எதற்கும் துணிந்தவன்’ என அடுத்தடுத்த படங்களில் நடித்த அவர், தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில், அவர் சேலை அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரேவண்ணா சிறப்பு விசாரணைக்கு குழு காவலில் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல் உறுப்புகள் சீராக இருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் வாக்கு சதவீதங்கள் அறிவித்ததில் முரண்பாடு ஏற்பட்டது ஏன் எனத் தேர்தல் ஆணையத்திடம் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், வாக்கு சதவீத முரண்பாடு இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சியா என மக்கள் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளார். இனி வரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு நடந்த 24 மணி நேரத்தில் விவரங்களை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 56 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு அணி கூட தேர்வாகவுமில்லை, வெளியேறவும் இல்லை. KKR, RR அணிகள் 16 புள்ளிகளுடனும், CSK, SRH, DC, LSG அணிகள் 12 புள்ளிகளுடனும், RCB, PBKS, MI, GT அணிகள் 8 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அனைத்து அணிகளுக்கும் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.