India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 11, மக்களவையில் 4 தொகுதிகளில் மட்டும் ஜெகன் மோகனின் கட்சி வெற்றி பெற்றது. இதனால் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. இது அவருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். இலவசத் திட்டங்களை அமல்படுத்திய ஜெகன், தேர்தலில் அது தனக்கு கைகொடுக்கும் என நம்பி கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டார். அவரது இந்த தவறான வியூகமும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி தொகுதியில் 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்துள்ளார் கனிமொழி. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தகுதியை பெற முடியாத அண்ணாமலை தலைவராகத் தொடர்வது பாஜகவிற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, தாமரை மலராது என மக்கள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
INDIA கூட்டணி ஆட்சியமைப்பதில் உறுதியாக இருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அரசியலமைப்பை பாதுகாப்பதில் மிகப் பெரிய வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய அவர், நாங்கள் ஏன் ஆட்சியமைக்க முயற்சிக்கக் கூடாது?. தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்றார். மேலும், பெரும்பான்மைக்கு மிக தொலைவில் இருக்கும் பாஜக, கூட்டணி கட்சிகளை நம்பியே உள்ளது என்றார்.
7 கட்டத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனைத் தொகுதிகளில் வென்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
* 1ஆவது கட்டம்: பாஜக 30, காங். 27
* 2ஆவது கட்டம்: பாஜக 46, காங். 17
* 3ஆவது கட்டம்: பாஜக 57, காங். 15
* 4ஆவது கட்டம்: பாஜக 39, காங்.14
* 5ஆவது கட்டம்: பாஜக 19, காங். 5
* 6ஆவது கட்டம்: பாஜக 31, காங்.6
* 7ஆவது கட்டம்: பாஜக 17, காங். 9.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 450 புள்ளிகள் உயர்ந்து 22,337 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது முடிவுகள் நிச்சயமற்று இருந்ததால் நேற்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. அதனைத் தொடர்ந்து, இன்று பாஜக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதால் பங்குச்சந்தை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது.
டெல்லியில் நடைபெறும் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பாஜக, ஜன சேனா, தெ.தே.க ஆகியவை இணைந்து பணியாற்றியதால் தான் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், என்.டி.ஏ கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக் கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜகவுக்கு NDA கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. NDA அரசு மீண்டும் அமைய முக்கிய காரணமாக இருக்கப் போவதாக அவதானிக்கப்படும் சந்திரபாபுவுக்கு வாழ்த்து சொன்ன மோடி, மற்றொரு முக்கிய கூட்டாளியான நிதிஷ்குமாருக்கு மட்டும் இதுவரை வாழ்த்துக் கூறவில்லை. அதேபோல, நிதிஷும் மோடிக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனால், நிதிஷ் என்ன செய்யவிருக்கிறார் என கேள்வி எழுந்துள்ளது.
பிரபாஸ் – கமல்ஹாசன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான சிறப்பு போஸ்டர் ஒன்றை வைஜெயந்தி பிலிம்ஸ் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே வெளியான டீசர் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கும் நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், பாஜக, INDIA கூட்டணியின் கூட்டங்கள் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3 மணிக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதேபோல், மாலை 5 மணிக்கு INDIA கூட்டணித் தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் 13 செ.மீ. மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் சிருகமணி, திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவானது. சென்னை அருகேயுள்ள செங்குன்றம், பொன்னேரி பகுதிகளில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.