India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னணி நடிகர்கள் ஓடிடி தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நிலையில், அதில் அதிக சம்பளம் பெறுபவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜய் தேவ்கன் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு எபிசோடில் நடிக்க ₹18 கோடி சம்பளம் பெறுகிறார். அடுத்தபடியாக, மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ₹10 கோடி வாங்குகிறார். தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.
ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மக்களின் நிறத்தை பல்வேறு நாட்டினருடன் ஒப்பிட்டு பேசியதை கண்டித்த அவர், தோல் நிறத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுவதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கருத்து தனக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளதாகவும், நாட்டு மக்கள் குறித்த அவரது கருத்தை சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் காவலராக நடித்த விஜய் முத்துவை, நடிகர் ரஜினி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். குணா குகையை மையமாக வைத்து உருவான இப்படம், கடந்த பிப்.22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகம் முழுவதும் ரூ.200+ கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், கடந்த மே 3ஆம் தேதி இப்படம் ஹாட்ஸ்டார் OTT-இல் வெளியானது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கே.பூபதி மற்றும் மயிலாப்பூர் பகுதி தலைவர் கே.கோபிநாதன் உள்ளிட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போதே கூட்டணி அமைப்பதற்கு கே.பூபதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தமாகாவில் இருந்து விலகி அவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
மரணமடைவதற்கு முன் காங்., தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்த ராஜா என்பவரைக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் ரூ.200 கோடி சொத்து உள்ளது. ரூ.30 லட்சத்திற்காக அவரைக் கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை என விளக்கமளித்த ஆனந்த ராஜா , கடிதத்தில் தனது பெயர் இருந்ததால், மும்பைக்கு சென்றதாகக் கூறினார்
2024 டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை, உகாண்டா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள உகாண்டா அணியை, கேப்டன் பிரையன் மசாபா வழிநடத்த உள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில், வரும் ஜூன் 2ஆம் தேதி இத்தொடர் தொடங்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகள், தங்களது வீரர்களின் விவரங்களை ஏற்கெனவே வெளியிட்டது.
ஸ்மார்ட் டிவி வாங்கும் போது, பலருக்கு எத்தனை இன்ச் டிவியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படும். அறையில் டிவி பொருத்தப்பட இருக்கும் இடத்திற்கும், நீங்கள் டிவியை அமர்ந்து பார்க்கும் இடத்திற்கும் இடையேயான இடைவெளியை 2ஆல் வகுத்தால் இதற்கான பதில் கிடைத்துவிடும். அதாவது, டிவிக்கும் நீங்கள் அமரும் இடத்துக்குமான இடைவெளி 110 இன்ச் எனில், நீங்கள் 55 இன்ச் டிவியை வாங்குவது சரியான தேர்வாக இருக்கும்.
காங். மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியின் போது, பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு இந்தியா சிறந்த உதாரணம் என்றார். இந்திய மக்கள் கிழக்கில் சீனர்களை போலவும், மேற்கில் அரேபியர்கள் போலவும், வடக்கில் வெள்ளையர்களைப் போலவும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாகத் தெரிவித்தார்.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், சிகிச்சையின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உரிய மருத்துவ வசதிகள் செய்த பின் மருத்துவமனையை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.