India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒருசிலப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மே 12ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதானியிடமிருந்து தேர்தலுக்காக காங்கிரஸ் எவ்வளவு நிதி பெற்றது என்ற விவரத்தை ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கரிம்பூரில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அம்பானி, அதானி உள்ளிட்ட 5 தொழிலதிபர்களைப் பற்றி ராகுல் அடிக்கடி பேசுவார். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர்களைப் பற்றி பேசாமல் ஏன் திடீர் மௌனம் காத்து வருகிறார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மே 11ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 9ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 10ஆம் தேதி 9 மாவட்டங்களிலும், மே11ஆம் தேதி 7 மாவட்டங்களில் சில இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, மே 13-14 வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘குரங்கு பெடல்’ , ‘கொட்டுக்காளி’ போன்ற மிகத் தரமான பல படங்களைத் தொடர்ந்து தயாரிக்க வேண்டுமென விருப்பம் உள்ளது. சிறுவர்களை மையமாக வைத்து எடுத்த ‘குரங்கு பெடல்’ படத்தை திரைக்குக் கொண்டு வந்தார். அடுத்ததாக, பல சர்வதேச விருதுகளை வென்ற சூரி நடித்த கொட்டுக்காளி படத்தை 200 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் செய்ய, அவர் திட்டமிட்டுவருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அமுல் நிறுவனம் தற்போது வரை தமிழகத்தில் பால் பண்ணையை அமைக்கவில்லை என தமிழக பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம், ஆவினுக்குப் போட்டியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பால் விற்பனையை தொடங்கியதாக தகவல் வெளியானது. இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசு, அப்படி எதுவும் நடக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம், இந்தாண்டுக்குள் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் சைபீரியாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜெயம் ரவிக்கு பதிலாக, நடிகர் அசோக் செல்வன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா ஆக்கிரமிப்பாளர்களுக்கான தேசம் என காங்கிரஸ் கருதுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்திய மக்களை காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா நிறத்தின் அடிப்படையில் பிரித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கு வெளியே எஜமானர்களை வைத்திருக்கும் காங்., கட்சியினரால் மட்டுமே இப்படி பேச முடியும் என்றார். மேலும், இந்தியர்களை ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றலாக காங்., கருவதாகத் குற்றம்சாட்டினார்.
பள்ளி ஆசிரியர்களை அலுவலகப் பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் செய்துத் தர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலை சிறையில் இருந்து அமைச்சரவை கூட்டத்தை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறி, பொதுநல மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ED கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு ஏன் ஜாமின் தரக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.
ஹரியானாவில் பாஜக அரசு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என அம்மாநில முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். மற்ற கட்சிகளை சேர்ந்த பல எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருப்பதால் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பாஜக அரசை ஆதரித்து வந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.