News May 8, 2024

அதிக பணக்காரர்கள் வசிக்கும் நகரங்கள் பட்டியல்

image

பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்கள் பட்டியலில் நியூயார்க் முதலிடம் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் முதல் 10 இடங்களில், சீனாவின் 5 நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்த ஆசிய பசிபிக் நாடுகளில், டோக்கியோ அதிக மில்லியனர்கள் வாழும் நகரமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

News May 8, 2024

மோடி தோல்வி பயத்தில் நண்பர்களையே விமர்சிக்கிறார்

image

தோல்வி பயத்தில் பிரதமர் மோடி, தனது நண்பர்களான அம்பானி, அதானியை விமர்சிக்க தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். பிரதமர் நாற்காலி விரைவில் பறிபோகப் போகிறது என்பதை உணர்ந்துள்ள மோடி, அதானி, அம்பானிகளை காங்கிரஸுடன் இணைத்து பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முன்னதாக, பரப்புரையில் பேசிய மோடி, இப்போதெல்லாம் ராகுல் ஏன் அம்பானி, அதானிகளை பற்றி பேசுவதில்லை என விமர்சித்திருந்தார்.

News May 8, 2024

71 வயதில் 11 வகையான லைசென்ஸை பெற்றுள்ள பாட்டி

image

கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் (71) என்பவர், 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக 1981இல் 4 சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர், படிப்படியாக கிரேன், ஜேசிபி, அதி கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசென்களை பெற்றதாக கூறினார். இளையோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் அவர், கேரளாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார்.

News May 8, 2024

மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு ரிசல்ட்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை அறியலாம். இதுமட்டுமின்றி, பள்ளி சார்பில் மாணவர்களுக்கு SMS வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News May 8, 2024

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி

image

கர்நாடகாவின் குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி (1,493 அடி) இந்தியாவின் உயரமான நீர் வீழ்ச்சியாக உள்ளது. இது ஆசியாவில் 2ஆவது உயரமான நீர் வீழ்ச்சியாகும். இது ஷிமோகா மாவட்டத்தில், அகும்பே அருகே வாராஹி ஆற்றில் அமைந்துள்ளது. ஒடிசாவில் உள்ள பரேஹிபானி நீர்வீழ்ச்சி (1,309), மேகாலயாவில் நோஹ்கலிகாய் (1,115) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தமிழ்நாட்டில், பழனியில் உள்ள எலி வால் நீர் வீழ்ச்சியே (975) மிக உயரமானது.

News May 8, 2024

மாலை நேர உடற்பயிற்சியின் சிறப்புகள்

image

*மாலை நேர உடற்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். *நம் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் வரும். *அலுவகத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் தடைகளின் இறுக்கத்தை சரி செய்யும். *மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும். *மாலை நேரத்தில் பொறுப்புகள் பெரும்பாலும் முடிந்திருக்கும் என்பதால், நிம்மதியான பயிற்சியில் ஈடுபடலாம்.

News May 8, 2024

ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை

image

நடப்பு கல்வியாண்டு முதல், வேளாண் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை., அண்ணாமலை பல்கலை.யில் நடத்தப்படும் வேளாண் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://tnagfi.ucanapply.com இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பொது ₹600, SC, ST ₹300 கட்டணம். விவரங்களுக்கு 94886 35077, 94864 25076, 04365 – 256430 என்ற எண்களில் அழைக்கவும்.

News May 8, 2024

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு

image

கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது மே 10இல் தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் தரக்கூடாது என ED கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

News May 8, 2024

T20 தொடரில் 350+ விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

image

டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய 11 ஆவது வீரர் என்ற சாதனையை RR அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார். டி20 (ஐபிஎல்+சர்வதேசம்) போட்டிகளில் இதுவரை 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் விவரம் இதோ: பிராவோ (625),ரஷீத் (572), நரைன் (549), தாஹிர் (502), ஷகிப் (482), ரசல் (443),ரியாஸ் (413), மலிங்கா (390), தன்வீர் (389), ஜோர்டான் (368) சாஹல் (350).

News May 8, 2024

கோவிஷீல்டு கிட்ட வந்து மாட்டிக்கிட்டோம்

image

உலகளவில் பிரபலமான 2 கொரோனா தடுப்பூசிகள் Pfizer மற்றும் Moderna. ஆனால், இவற்றை இந்திய மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மாறாக AstraZeneca நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த ஊசிதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கோவாக்சின் & ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

error: Content is protected !!