India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பப்புவா நியூ கினியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அசாதுல்லா வாலா தலைமையிலான அந்த அணியில், சி.ஜெ. அமினி (துணை கேப்டன்), அலி நாவோ, சாட் சோப்பர், ஹிலா வரே, ஹிரி , ஜாக் கார்ட்னர், ஜான் கரிகோ, கபுவா வாகி மோரியா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், ஏற்கனவே தங்களது டி20 அணிகளை அறிவித்துள்ளன.
+2 பொதுத்தேர்வில், திருப்பூரைச் சேர்ந்த மாணவி மகாலெட்சுமி 598/600 மதிப்பெண் பெற்றிருந்தது அனைவரும் அறிந்ததே. 2022-23 கல்வியாண்டில், வணிகவியல் பாடப்பிரிவில் படித்த திண்டுக்கல் மாணவி நந்தினி, 600/600 மதிப்பெண்கள் எடுத்து சாதித்திருந்தார். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 2 மதிப்பெண்கள் குறைவு என்றாலும், அதிகப்படியான மதிப்பெண்களை எடுத்து முதலிடத்தை பிடிப்பதில் மாணவிகள் எப்போதும் முன்னிலையிலேயே உள்ளனர்.
+2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி பெற ஏதுவாக, ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை தமிழக அரசு இன்று தொடங்கி வைத்துள்ளது. அதன்படி, சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரியில் நாளை ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாணவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அஸ்வினிடம் இருந்து நிறைய கிரிக்கெட் நுட்பங்களை கற்றுள்ளதாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். பந்து வீச்சு தொடர்பாக எழும் சிக்கல்களை, அஸ்வின் மிக எளிதாக புரிய வைப்பார் எனவும் அவர் புகழ்ந்துள்ளார். நேற்றைய RRvsDC போட்டியில், ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்த நிலையிலும், குல்தீப் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல், கண்ணீரை வரவழைக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நீர் மேலாண்மை மற்றும் குடி மராமத்து திட்டத்தை முழுமையாக தமிழக அரசு கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு திமுக அரசே காரணம் எனவும் விமர்சித்தார். தமிழக அரசு இனியாவது விழித்துக்கொள்ளுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
+2 முடித்த மாணவர்கள், எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்விக் கடன், உதவித் தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை, 14417 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு அறியலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், துணைத் தேர்வு தொடர்பான விவரங்களை அறிய, அந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் காலை 8 – இரவு 8 மணி வரை சந்தேகங்களை கேட்கலாம்.
+2 பொதுத்தேர்வில் 487 மார்க் எடுத்த ராமநாதபுரம் மாணவி ஆர்த்திக்கு உதவி செய்ய இயக்குநர் சேரன் முன்வந்துள்ளார். தந்தை இறந்த நிலையில், மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் தவிப்பதாக ஆர்த்தி கண்ணீர்விட்டு உதவிக் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப் பார்த்த இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பதிவில், “அந்த தங்கைக்கான முகவரி கிடைத்தால் என்னால் முடிந்த உதவி செய்ய இயலும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
20-25 பந்துகளில் போட்டியையே மாற்றும் திறமை ஷிவம் துபேவிடம் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஐபிஎல் தொடர்பில் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து, கேளிக்கைக்காக துபே (ஸ்ட்ரைக் ரேட் 170) சிக்ஸ் அடிக்கிறார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வெறியாட்டம் போடும் அவரது ஆட்டத்தை உலகக் கோப்பையில் பாருங்கள்” எனக் கூறினார்.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாகக் கூறிய காங்., மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “ராகுலின் வழிகாட்டியாக இருக்கும் நபரின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளில் உள்ள இனவெறியைப் பாருங்கள். இந்தியர்கள் குறித்து இப்படிப் பேச INDIA கூட்டணி வெட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற பழனியாண்டியை, அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததுடன், பழனியாண்டியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.