News May 8, 2024

வார்னரை பிளாக் செய்ததா SRH அணி?

image

SRH அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் தன்னை பிளாக் செய்தது வேதனை அளித்ததாக DC வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். RR அணி வீரர் அஷ்வினுடனான உரையாடலில் வார்னர், இந்தத் தகவலைக் கூறியுள்ளார். அதே நேரத்தில், SRH அணியின் ரசிகர்கள் இன்னும் சமூக ஊடகங்கள் வழியே தன்னுடன் தொடர்பில் உள்ளனர் என்றும், இந்திய மக்கள் பாசிட்டிவ் மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

News May 8, 2024

சாம் பிட்ரோடா ராஜினாமா

image

அயலக அணி தலைவர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக, சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். இந்தியர்களின் நிறம் குறித்து, சமீபத்தில் அவர் கூறிய கருத்து சர்ச்சையானது. இதனால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக அவர் பேச்சுக்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

News May 8, 2024

உச்சகட்டத்தை எட்டிய மோதலால் பொதுமக்கள் அவதி

image

ஏர் இந்தியா ஊழியர்களுக்கும், அந்நிறுவன தலைமையான டாடா நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்சனை உச்சம் தொட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணைய உள்ளதாக செய்திகள் வந்ததால், ஏர் இந்தியா பணியாளர்கள், டாடாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இன்று, ஏர் இந்தியாவின் சுமார் 300 ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால் 80 விமானங்கள் ரத்தானது. ஊழியர்களிடம் டாடா பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

News May 8, 2024

இந்தியாவின் வளர்ச்சி சீன பாதையை ஒத்திருக்குமா?

image

இந்தியாவின் அடுத்த தசாப்த வளர்ச்சி, 2007 – 2012 வரையிலான சீனாவின் வளர்ச்சிப் பாதையை ஒத்திருக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்திருக்கிறது. அதன் அறிக்கையில், ”
பொருளாதார வளர்ச்சியில் நாட்டிற்கு பல சாதகமான நிலைமைகள் உள்ளன. புவிசார் அரசியல், ரியல் எஸ்டேட், டிஜிட்டல் மயமாக்கல், க்ரீன் எனர்ஜிக்கு மாறுதல், கடல்வழிப் போக்குவரத்து கட்டமைப்புகள் வளர்ச்சியைத் தூண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

News May 8, 2024

மீண்டும் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ரூபாலா

image

ராஜபுத்திரர்கள் தொடர்பாக கூறிய கருத்துக்கு, 2ஆவது முறையாக மத்திய அமைச்சர் ரூபாலா மன்னிப்பு கோரியுள்ளார். பரப்புரையில் பேசிய அவர், ராஜபுத்திரர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜபுத்திர சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக ரூபாலா, ஏற்கெனவே மன்னிப்பு கேட்ட நிலையில், அதனை ராஜபுத்திர மக்கள் ஏற்கவில்லை.

News May 8, 2024

ஜாதகப் பொருத்தத்தை விட ரத்தப் பரிசோதனை முக்கியம்

image

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ் சர்டிபிகேட் தருவதாகவும் கூறினார். தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், இக்கருத்தை முன்வைத்தார்.

News May 8, 2024

விரைவில் சந்தைக்கு வரும் கல்லினன் II சீரிஸ்

image

பிராண்டட் சொகுசு கார்களில், மிகுந்த வரவேற்பைப் பெற்ற கல்லினனின் II சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 6.75 லிட்டர் கெப்பாசிட்டி, 6750 cc, ட்வின்-டர்போ சார்ஜ்டு v12 இன்ஜின், 563 bhp பவர், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற நவீன வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை ₹6.96 கோடியாகும்.

News May 8, 2024

லக்னோ அணி பேட்டிங்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற LSG கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றி பெற்றுள்ள SRH அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல, 11இல் 6 போட்டிகளில் வென்றுள்ள LSG அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில் 6ஆவது இடத்தில் உள்ளது.

News May 8, 2024

₹20,000க்கு மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது

image

கடன் வழங்குவது தொடர்பாக வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக ₹20,000க்கு மேல் வழங்கக் கூடாது எனவும், இந்த விதிமுறைகளை NBFC-க்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக IIFL-இல் நிதி முறைகேடு நடந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News May 8, 2024

மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

மோடியின் பேச்சு தொடர்பாக INDIA கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் நாளை புகார் அளிக்க உள்ளனர். ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மோடி பேசியது, இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், INDIA கூட்டணி சார்பாக புகாரளிக்கப்பட உள்ளது. மேலும், மோடியின் பேச்சு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் செல்வப்பெருந்தகை வழக்குத் தொடுத்துள்ளார்.

error: Content is protected !!