India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஷூட்டிங்கின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடிகர் அருள்நிதி சென்னை போரூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையறிந்து ஹாஸ்பிடல் சென்ற CM ஸ்டாலின், தனது தம்பி மகனான அருள்நிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அறுவை சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

இந்தியாவின் மிகவும் பணக்காரக் குடும்பங்கள் யார் தெரியுமா? அவர்கள் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். நீண்ட கால தொழிலில், அவர்களது தொடர்முயற்சியும், புத்திசாலித்தனமும் அவர்களை இன்று செல்வந்தர்களாக உயர்த்தியுள்ளது. அவர்கள் யார் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் செல்வந்தர்களாக விரும்புகிறீர்களா?

ஜெர்மனியின் வடக்கு பகுதியில், 31 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Arthrolycosa wolterbeeki என பெயரிடப்பட்ட இந்த சிலந்தியின் படிமத்தில், அதன் கால்களில் உள்ள நுண்ணிய முடிகள் கூட சிதையாமல் உள்ளன. டைனோசர்கள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிலந்தி வாழ்ந்ததாக கூறும் நிபுணர்கள், இதன் மூலம் அப்போதைய உயிரின வளர்ச்சியை அறியலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு டிச.5-ம் தேதி முதல் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும், அதன்பிறகு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை விநியோகம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.

வானத்தை நோக்கி Gunfire செய்யும்போது மேலே செல்லும் புல்லட், பின் ஈர்ப்பு விசையால் மீண்டும் கீழே விழும். அப்போது அங்கு யாராவது இருந்தால் அவர்களுக்கு காயம் ஏற்படலாம். ஆனால் ராணுவ மரியாதைக்காக வானத்தை நோக்கி சுடப்படும் குண்டுகளால் காயம் ஏற்படாது. காரணம், அப்போது பயன்படுத்தப்படும் தோட்டாவில் வெடிமருந்து இருக்காது. அது வெறும் காலி கார்ட்ரிட்ஜ் மட்டுமே. அதனால் சத்தமும் புகையும் மட்டுமே வரும். SHARE.

திரைப்புகழைக் கொண்டு சிலர் மாய பிம்பத்தை உருவாக்குவதாக, விஜய்யை மறைமுகமாக கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் கட்டமைப்பை உருவாக்கிவிட்டதாக சிலர் நினைக்கின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார். தவெக தலைமையில் தான் கூட்டணி என விஜய் திட்டவட்டமாக அறிவித்ததால், விஜய்யை தாக்கி பேச அதிமுக தலைவர்கள் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்ஆப்பில் இருந்து அரட்டை உள்ளிட்ட பிற மெசேஜிங் ஆப்களுக்கும், அந்த ஆப்களை டவுன்லோட் செய்யாமலேயே, மெசேஜ் அனுப்பும் வசதியை, மெட்டா பரிசோதித்து வருகிறது. டிஜிட்டல் துறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கத்தை தடுக்க, ஐரோப்பிய யூனியன் சட்டங்களை கடுமையாக்கியதால், ஐரோப்பிய நாடுகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து மெட்டா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

நிலவு என்றாலே அழகு தான். அதிலும் பெளர்ணமி அன்று வானில் தோன்றும் முழு நிலவின் அழகை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இப்படி வரும் சில முழு நிலவுகளை நாம் சூப்பர் மூன், பிளட் மூன் என்றெல்லாம் அழைப்போம். அப்படி எத்தனை வகை முழு நிலவுகள் உள்ளன, அதன் பெயர் என்ன, காரணம் என்ன என்பது பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க…

காந்தாரா: சாப்டர் 1-ல் மெய்சிலிர்க்க வைத்த ருக்மிணி வசந்த், அதன்பிறகு தொடர்ச்சியாக சேலையில் இருக்கும் போட்டோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார். படத்தில், இளவரசி கனகவதியாக வாழ்ந்த ருக்மிணி, சேலையில் பிரம்மன் தீட்டிய ஓவியமாக இருக்கிறார். தற்போது, இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோக்களில், அவரது கண்கள் காவியம் பேசுகின்றன. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

பழைய ₹500, ₹1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என RBI அறிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECK), அந்த செய்தி வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ளது. RBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (rbi.org.in) வெளியாகும் தகவல் மட்டுமே உண்மையானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதனால், உஷாராக இருங்கள் மக்களே!
Sorry, no posts matched your criteria.