India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கொளத்தூர், அடையாறு, மயிலாப்பூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோயம்பேடு, வடபழனி, தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், நேற்றும், இன்றும் தொடர்ந்து மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், ஃபேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும்போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது AC-யை 24-26 டிகிரி செல்சியஸில் வைப்பதன் மூலம் 36% மின் கட்டணத்தை சேமிக்கலாம். இதை இன்றே உறுதி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா இன்று தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல படங்களில் நடித்திருந்தாலும், ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த அவர், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, ஜீ கோல்டன் விருது, நந்தி விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 300 ஊழியர்கள் நேற்று மருத்துவ விடுப்பில் சென்றதால், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மூத்த ஊழியர்கள் 25 பேரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணையப் போவதாக தகவல் வெளியானதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் 2ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நாளை காலை 9.30 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறியலாம் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் ஆட்டம் முடிந்து விட்டதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். சர்ச்சையாகப் பேசியதால் ஆகாஷ் ஆனந்தை கட்சி பொறுப்புகளில் இருந்து மாயாவதி நீக்கியது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அவரின் முடிவு தாமதமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலில் அக்கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம் வரும் மே 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் பேடிஎம் இணையதளப் பக்கங்களிலும் தொடங்க உள்ளது. இதில், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. ₹1,700 முதல் டிக்கெட் விலை தொடங்குகிறது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளன. மொத்தம் 270 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், பலத்த காற்று இடியுடன் மழை பெய்ததால் 100 கேமராக்கள் பழுதானது. இதனையடுத்து, ஒருமணி நேரத்தில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், தென்சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் 2 கேமராக்கள் பழுதாகியுள்ளன.
அண்மையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். அதில், தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் விளங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். எந்தப் பெயரையும் தமிழ்ப்படுத்த குழு அமைப்போம் என்றும், இது நிறைவேறினால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தலைநகர் சென்னையில் மனிதர்களை நாய்கள் அச்சுறுத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்றபோது நாய் கடித்து பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். சமீபத்தில் 5 வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளதால் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று வேளச்சேரியிலும், இன்று சூளைமேட்டிலும் நாய் கடி சம்பவம் அரங்கேறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.