India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் ஓய்வெடுக்க சுற்றுலாச் சென்றுள்ளனர். அந்த வகையில், பல்வேறு தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மகன் இன்பநிதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் தனது X பக்கத்தில் வெளியிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், மே 12ஆம் தேதியும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நெல்லை, தேனி, தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களிலும், மே 12ஆம் தேதி கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும், அடுத்த 5 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
‘அன்னபூரணி’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ப்ளாக் ஷீப் யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தில், யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை நயன்தாரா படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.
நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் பிரிப்பது கண்டிக்கத்தக்கது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சாம் பிட்ரோடாவின் இனவெறி கருத்துக்கு காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், 1947இல் நடந்த பிரிவினைக்கு காரணமான காங்., தற்போது மொழி, இனம், மதம் என மக்களை துண்டாட நினைப்பதாக விமர்சித்தார். மேலும், காங்கிரசின் மனநிலை ஆபத்தானது எனத் தெரிவித்தார்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக கைதான சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கோவை சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாய், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு, வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
குமரி பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ வேலாயுதம் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இச்செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும் கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் என்றும் தன் மீது அளவற்ற பாசத்துடன் பழகியவர் எனவும் நினைவுகூர்ந்துள்ளார்.
காங்., தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்குச் சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்கு சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில், வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், கடைக்கு சென்ற ஜெயக்குமார் வீட்டிற்கு வந்த பின், என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமரை பற்றி அதிகம் பேசாத மோடி, தேர்தல் நேரத்தில் ராமரை கையில் எடுத்துள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் பிரசாரம் செய்த அவர், வெற்றி பெற மோடி மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகக் கூறினார். ஓட்டுக்காக அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சிக்கும் பிரதமரின் செயல் அநாகரீகமானது என்றும் அவர் தெரிவித்தார்.
ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், காங்கிரஸ் ‘பாபரின் பெயரால்’ ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடும் என மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, மோடி மீண்டும் மீண்டும் அப்பட்டமான பொய் பிரசாரம் செய்வதாகத் தெரிவித்தார்.
அனைத்து வயதினரும் எளிமையான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வரும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. போட்டியாக எத்தனை செயலிகள் வந்தாலும், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக பல ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், வாட்ஸ் ஆப்பும் புதிதாக ‘GameOn’ என்ற பெயரில் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.