India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிவரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஏற்கெனவே ரஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில் தற்போது கரீனா கபூரும் இணைந்துள்ளார். இதனால், படத்தின் நாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
நீதிமன்ற உத்தரவு வந்தால் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுடன், உள்ளாட்சி தேர்தலும் ஒன்றாக நடக்கக்கூடும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஆம்பூரில் பேசிய அவர், “வேலூர் மக்களவைத் தொகுதியில் டி.எம்.கதிர் வென்றதை திமுக அரசின் மக்கள் நலப் பணிகளுக்காக கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். இந்த வெற்றி இன்னும் 2 ஆண்டுகால அவகாசத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை & உள்ளாட்சி தேர்தலிலும் தொடர வேண்டும்” என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து அவர் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளார். தன்னை ஆதரிக்கும் எம்பிக்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மோடி.
பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதனால், எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத சூழல் பாஜகவுக்கு உருவாகியுள்ளதால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சாத்தியமாகுமா என்பது இனிமேல் தான் தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், தமிழகத்தில் வென்றிருக்கலாம் என்ற கருத்து இரு கட்சியினரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறி வருகிறார். இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாஜக நிர்வாகிகள், மோடி, அமித்ஷா போன்ற மேல்மட்டத் தலைவர்களே அதிமுக கூட்டணியை விரும்பும்போது, அண்ணாமலை மட்டும் முரண்டு பிடிப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜூன் கடைசி அல்லது, ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. திமுக MLA புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரனின் அருளை ஒருங்கே பெறலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரதம் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இதனால், நாள்பட்ட துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என நம்பப்படுகிறது.
*தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்சாரக் கட்டணம் உயர உள்ளதாக தகவல்
*டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி அறிவிப்பு
*சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவலர் சஸ்பெண்ட்
*T20 WC: பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்க அணி; மற்றொரு போட்டியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.
*அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் 20இல் தொடங்க உள்ளதாக தகவல்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
Sorry, no posts matched your criteria.