India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தெருநாய்கள் வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. *பள்ளி, கல்லூரிகள், ஹாஸ்பிடல் பகுதிகளுக்குள் தெருநாய்கள் நுழைவதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் *அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பகுதிகளுக்குள்ளும் நாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும் *மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை *இதை ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிக்க உத்தரவு.

பாஜக தூண்டிவிடுவதால்தான் போர்க்கொடி தூக்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்கவும், கூட்டணிக்காக பேசவும் தான் பாஜக தன்னை அழைத்ததாகவும், தன்னை வைத்து கட்சியை உடைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். எனவே, பாஜக சொன்னதால்தான் 6 அமைச்சர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பு பற்றி EPS-யிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்று, USA Passport-களில் ஆண், பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே குறிப்பிட முடியும் என்ற உத்தரவு. இந்நிலையில், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டிரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க USA உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் திருநங்கைகள், மற்றும் பிற பாலின மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

2011-ல் கூட்டணி விவகாரத்தில் OPS செய்த தவறுக்கு தான், தற்போது அவர் பலனை அனுபவித்து வருவதாக வைகோ விமர்சித்துள்ளார். மதிமுக கூட்டத்தில் பேசிய அவர், 2011-ல் மதிமுகவுக்கு 12 இடங்களை மட்டுமே தருவதாக இருந்த போதும், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணிக்கு தயாராக இல்லை என்று OPS பொய் சொல்லிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கெளரி கிஷனிடம் எடை குறித்து கேட்ட செய்தியாளரை குஷ்பூ விமர்சித்துள்ளார். பெண்ணின் உடல் எடை என்பது இவர்களுக்கு தேவையற்ற விஷயம் எனவும், மீடியா தரக்குறைவாகி வருவதாகவும் விமர்சித்தார். இக்கேள்வியை அவர் வீட்டு பெண்களிடம் கேட்டால் அமைதியாக இருப்பாரா என்று வினவிய குஷ்பூ, அவருக்கு பதிலடி கொடுத்த கெளரியையும் பாராட்டினார். மேலும், மரியாதை கொடுத்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுகவிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். <<18222737>>தனது ஆதரவாளர்கள்<<>> நீக்கப்பட்டது பற்றி பேசிய அவர், எதிர்த்து பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவது கட்சியையும் அந்நபரையும் பலவீனப்படுத்தும் என தெரிவித்துள்ளார். மேலும், தன்னை போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் EPS CM ஆனார் எனவும் கூறியுள்ளார்.

நெல்லை திமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கவுன்சிலர்கள் எதிர்ப்பால் மேயர் மாற்றப்பட்டது, பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மாற்றப்பட்டது ஆகிய சம்பவங்களே இதற்கு சாட்சி என்கின்றனர். இந்நிலையில், உள்கட்சி பூசலால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தலைமைக்கு ரிப்போர்ட் போனதால் தான், <<18218356>>பதவி பறிக்கப்படும்<<>> என ஸ்டாலின் நேற்று எச்சரிக்கை செய்தாராம்.

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக திரையில் கோலோச்சி வரும் அவர், சுமார் ₹450 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் ஆடம்பரமான வாழ்க்கையின் பட்டியலை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து என்னென்ன சொத்துக்களை கமல் வைத்துள்ளார் என பாருங்க.

SIR பணிகள் கடந்த 4-ம் தேதி தமிழகத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, வழக்குத்தொடர தீர்மானம் இயற்றப்பட்டது. இதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், வரும் 11-ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை, சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது பித்தலாட்டம் என்று வைகோ விமர்சித்துள்ளார். சம்பவம் நடந்தபோது விஜய் ஏன் திருச்சியில் தங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, உயிரிழப்பு செய்தி அறிந்ததும் சென்னை ஓடிச்சென்று விட்டதாக விமர்சித்துள்ளார். யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என CM பேசிய பின்பும், சகட்டு மேனிக்கு பேசியுள்ளதாக சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.