India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிடுவது போல CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக RB உதயகுமார் சாடியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவருக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். புதிய DGP முதல் மதுரை மேயர் வரை யாரையும் தேர்வு செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அடுத்த 48 – 72 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நல்வாய்ப்பாக புயலாக மாறாமல் கரையை கடந்த நிலையில், தற்போது புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது.

பிரபல கார்ல்ஸ்பெர்க் மதுபான நிறுவனம், உலகின் மிகச்சிறிய பீர் பாட்டிலை தயாரித்துள்ளது. வெறும் 12 மி.மீ. உயரமுள்ள இந்த பாட்டிலில் 1 துளி ஆல்கஹால் அல்லாத பீர் மட்டுமே இருக்கிறதாம். பொறுப்புடனும், குறைந்த அளவில் மது குடிப்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்த, இதனை உருவாக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஒருபுறம் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் சொதப்பிய நிலையில், நம்பிக்கை தரும் வகையில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். ODI பார்மெட்டில் ஆஸி., அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை இன்று ரோஹித் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் விராட் கோலி 802 ரன்களுடன் உள்ளார். ரோஹித் 73 ரன்களில் அவுட்டான போதும், இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்.

ஒரே நாளில் திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திட்டக்குடி நகராட்சி தலைவர் வெண்ணிலா தனது சொந்த கட்சி கவுன்சிலர்களாலேயே தோற்கடிக்கப்பட்டு பதவியை இழந்தார். அதேபோல், சொத்து வரி சர்ச்சையில் சிக்கிய ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செயல் அலுவலர் வெங்கடகோபு அறிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் 67 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். தொடக்கத்திலேயே கில் & கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் ரோஹித்தும், ஷ்ரேயஸும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து நம்பிக்கையூட்டினர். இந்திய அணி தற்போது வரை 28.2 ஓவர்களில் 130/2 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ODI ஆட்டத்திலுமே விராட் கோலி டக் அவுட் ஆனார். இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக டக் வாங்கிய இந்திய வீரர்கள் பட்டியலில் 40 டக் அவுட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இதனால், 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவரது ரசிகர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நீங்கள் இருக்கும் ஏரியா 40 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை தெரிஞ்சுக்கணுமா? ➤Google Earth-க்குள் செல்லுங்கள் ➤இதில் ‘Explore Earth’ என்ற ஆப்ஷன் இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால், மேலே ‘View’ என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதில் ‘Show Historical Imagery’ ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க. இப்படி செய்தால் பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வசிக்குமிடம் எப்படி இருந்தது என Time Travel செய்து பார்க்கமுடியும். SHARE.

வெள்ளி விலை இன்று(அக்.23) கிலோவுக்கு ₹1,000 குறைந்துள்ளது. கிராம் ₹174-க்கும், பார் வெள்ளி ₹1,74,000-க்கும் விற்பனையாகிறது. அக்.15-ம் தேதி முதல் இன்று வரை 7 நாட்களில் மட்டும் கிலோவுக்கு ₹33,000 குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக முதலீடு செய்யும் நோக்கில் வெள்ளியை வாங்கிக் குவித்தவர்களின் கவனம் தற்போது பங்குச்சந்தையின் மீது விழுந்துள்ளதாக கூறும் வல்லுநர்கள், விலை மேலும் குறையும் என கணித்துள்ளனர்.

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு திமுக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்து 10 நாட்கள் ஆகியும் 8,000 மெ.டன் நெல் மூட்டைகளை, அரசு கொள்முதல் செய்யாததால் நனைந்து வீணானதாக கண்டனம் தெரிவித்துள்ளார். 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், ஏக்கருக்கு ₹50,000 நிவாரணம் வழங்கவும் கோரியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.