News July 8, 2025

கொடூரத்தின் உச்சம்.. ரயிலில் பெண் கூட்டு பலாத்காரம்

image

நாள்தோறும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்கள் குலைநடுங்க வைக்கின்றன. ஹரியானாவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரத்தை அரங்கேற்றிய பிறகு, கொடூரர்கள் அந்த பெண்ணை தண்டவாளத்தில் வீசியுள்ளனர். அப்போது, மற்றொரு ரயில் ஏறியதால் அந்த பெண்ணின் கால் துண்டாகியுள்ளது. இதுக்கெல்லாம் எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?

News July 8, 2025

90% மூளை இல்லாமலும் சாதாரண வாழ்க்கை… எப்படி?

image

பிரான்சில் 44 வயதான ஒருவர் குடும்பம், வேலை என சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு திடீரென ஒரு நாள் தீராத கால் வலி ஏற்பட ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளையின் 90% பாகத்தை காணவில்லை. இதனை ஹைட்ரோசெபலஸ் (Hydrocephalus) என்பார்கள். அதாவது, மூளைக்குள் சீராக இருக்க வேண்டிய தண்டுவட திரவம் (CSF) அதிகமாகச் சேர்ந்து, மூளை அமைப்புகளை அழுத்துவதால் இப்படியான நிலை ஏற்படுகிறது.

News July 8, 2025

பெண்களுக்கு அரசு வேலைகளில் 35% இட ஒதுக்கீடு!

image

அனைத்து அரசு துறை பணிகளிலும் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அவர் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க & அதற்கான பயிற்சியை கொடுக்க பிஹார் யூத் கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

பள்ளி வேன் விபத்து… அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம்

image

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே கேட்டை வேன் ஒட்டுநர் அலட்சியமாக கடந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கு பிறகும் கேட் கீப்பர் வெளியே வரவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அலட்சியத்தால் 3 மாணவர்கள் பலியானது பெரும் சோகம்.

News July 8, 2025

அன்புமணியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தனது மகள் காந்திமதியை, ராமதாஸ் மேடையில் அமர வைத்தது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2025

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜூ!

image

இளம் சென்சேஷன் மமிதா பைஜூ தான் தற்போது பல முன்னணி நடிகர்களின் சாய்ஸ். ஜனநாயகன், சூர்யா 46, Dude என தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அடுத்த பெரிய புராஜெக்டையும் பிடித்து விட்டார். ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் தனுஷின் அடுத்த படத்தில் ஹீரோயினாக மமிதா கமிட்டாகி இருக்கிறார். இவுங்க ஜோடி எப்படி இருக்கும்?

News July 8, 2025

ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

image

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.

News July 8, 2025

வெரிக்கோசில் அறிகுறிகள் தெரியுமா?

image

விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுவதால் வெரிக்கோசில் ஏற்படுகிறது. இதன் முக்கிய அறிகுறிகள்: விதைகளில் மிதமானது முதல் தீவிர வலி *ரத்தக் குழாய்களில் வீக்கம் தெளிவாக தெரிவது *விதைகள் அவற்றின் வழக்கமான அளவிலிருந்து சிறிதாகுதல் *நீண்ட நேரம் நின்றாலோ, எடை தூக்கினாலோ அசவுகரியமாக உணர்வது. இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே டாக்டரை ஆலோசியுங்கள்.

News July 8, 2025

மைக்கில் பேசினால் மன்னரா? பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி

image

மைக் முன் பேசினால் மன்னர் என நினைத்துவிடக் கூடாது என பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. சைவம், வைணவம் தொடர்பாக ஆபாசமான முறையில் பேசிய Ex அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல்வாதிகள் பொது இடங்களில் யோசித்து பேச வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இந்த விவகாரத்தால்தான் பொன்முடி தனது பதவியை இழந்தார்.

News July 8, 2025

கடவுள் ராமர் எங்கள் நாட்டில் பிறந்தவர்… நேபாள PM!

image

நேபாள PM கே.பி.சர்மா ஒலியின் கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. வால்மீகி எழுதிய ராமாயணத்தின் அடிப்படையில் ராமர் தங்களது நாட்டில்தான் பிறந்தார் என்று அவர் கூறியுள்ளார். மேலும், சிவனும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலியாக அயோத்தியை ப்ரமோட் செய்வதாக அவர் இந்தியாவையும் விமர்சித்துள்ளார். இவரின் கருத்து குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!