India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டில் மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் வரை, மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என பிரதமர் சூளுரைத்துள்ளார். மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பிரசாரம் செய்த அவர், தான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலன் என்றார். வளர்ச்சியில் தன்னுடன் போட்டியிட முடியாது என்பதை அறிந்த காங்கிரஸ், பொய்களின் தொழிற்சாலைகளைத் திறந்து தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசி., அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். 123 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர், 2013ஆம் ஆண்டு முதல்முறையாக நியூசி., அணிக்காக களமிறங்கினார். ஆனால், அணியில் பெரியளவில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், T20 உலகக் கோப்பையிலும் இடம் கிடைக்காததால், ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில், சிம்பு நடிக்கக் கூடாது என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிம்புவுக்கு ரெட் கார்டு எச்சரிக்கை போடப்பட்டுள்ள நிலையில், அவர் தக் லைஃப் படத்தில் எப்படி நடக்கலாம் என்றும், ஒப்புக்கொண்டபடி கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், தேர்தல் பரப்புரையில் ஈடுபடவும் அனுமதி வழங்கியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21இல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவுகள் உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வகையில் ஜாமின் வழங்க வேண்டும் என்ற கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் தேர்தலை காரணம் காட்டி ஜாமின் கோரி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த போகிமான் ரசிகர், 1990 முதல் 2000 வரை அத்தொடரின் அனிமேஷன் அட்டைகளை சேகரித்து வைத்திருந்தார். அவரை அது தற்போது லட்சாதிபதியாக மாற்றியுள்ளது. அதாவது, அரிதான அந்த அட்டைகள் ஏலத்தில் வந்த நிலையில், இந்திய மதிப்பில் ₹57 லட்சத்துக்கு ஏலம் போனது. இது ஏலத்தின் ஆரம்ப தொகையைக் காட்டிலும் இருமடங்கு ஆகும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர் முதல்முறையாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். இதில், கடந்த ஆண்டை போல மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்க உள்ளார். ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர்களை சந்தித்த போது அண்ணா, பெரியார், காமராஜர் குறித்து பேசினார்.
சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஜாமின் பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவருக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி இருவரும் ஜாமின் பெறலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், 497 மதிப்பெண்கள் எடுத்து கூலித் தொழிலாளியின் மகள் சாதித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜே.சுஸ்யா, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், தமிழில்-98, ஆங்கிலத்தில்-99 என எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள மற்றும் சக மாணவிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும்தான் வட மாவட்டங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்க காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக, பொருளாதார காரணிகளும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளதாகவும், வட மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.