India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு சதவீதம் குறித்த காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்கு, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் அன்று வாக்குப்பதிவு சதவிகிதத்தை உடனே வெளியிட வேண்டும் என்ற கார்கேவின் கோரிக்கை, தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு மற்றும் தரவுகள் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கார்கே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரத்தில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்பட நாயகியும், பாஜகவின் அமராவதி தொகுதி வேட்பாளருமான நவ்நீத் ரானா மீது தெலுங்கானா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ராகுல் காந்திக்கு வாக்களித்தால், அது பாகிஸ்தானுக்கு அளிக்கும் வாக்கு என பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தேர்தல் ஆணைய பறக்கும் படையால் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சாத்நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பாஜகவுக்கு விழுந்த சம்மட்டி அடி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஒரு வழக்கின் விசாரணை முடியாமலேயே ஒரு மாநிலத்தின் முதல்வரை கைது செய்வோம் என்ற மோடி அரசின் அராஜகத்துக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் வழங்கியது.
மே மாதத்தில் ₹19,663 கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்று இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறியுள்ளனர். மே 2 -7 வரையிலான 4 நாள்களில் ₹6,000 கோடி மதிப்புள்ள பங்குகளும், மே 8இல் ₹6,669 கோடி & மே 9இல் ₹6,994 கோடி மதிப்புள்ள பங்குகளும் விற்பனையாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் முதலீடுகளை பாதிக்கக்கூடும் என்ற பயத்தில் அவர்கள் வெளியேறி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே பள்ளியில், ஒரு வகுப்பில் படித்த இரட்டைச் சகோதரிகள், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டது. இதில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அட்சயா மற்றும் அகல்யா, 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளனர்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விநாடிக்கு 3,000 கன அடி நீரை திறந்துள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வைகை அணை தண்ணீர் செல்லும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் மோடியை மதிப்பதாகவும், 5 அரேபிய முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்துள்ளதாகவும், இதுபோல் அந்நாடுகள் வேறு எந்த தலைவருக்கும் விருது அளித்ததில்லை என்றும் கூறினார்.
கோலி உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்த இடைவெளியை எல்லாம் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கோலி சரிசெய்து ரன்களை குவித்து வருவதாக கூறிய அவர், இந்த உலகக் கோப்பையில் அவரின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவும் என்றார். மேலும், பெங்களூரு அணி ப்ளே-ஆஃப்சுற்றுக்கு தகுதி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வழக்கமாக தங்கம் விலை காலை, மாலை என 2 நேரங்களில் மட்டுமே மாற்றியமைக்கப்படும். அதன்பிறகு இந்த வழக்கம், நாளொன்றுக்கு ஒரு முறையாக குறைந்தது. ஆனால், அட்சய திரிதியை நாளான இன்று வழக்கத்துக்கு மாறாக இதுவரை 3 முறை விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்றைய விலையை பார்த்து அதற்கேற்ப பணத்துடன் நகை வாங்க கடைக்கு வந்த மக்கள், இந்த புதிய வழக்கத்தால் என்ன செய்வதென தெரியாமல் குழப்பமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.