India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமான அம்பயர் பிஸ்மில்லா ஜன் ஷின்வாரி (41) காலமானார். தீவிர உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இவரது மரணத்துக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 24 ODIs, 21 T20Is உள்பட 60-க்கு மேற்பட்ட போட்டிகளில் அம்பயராக, டிவி அம்பயராக செயல்பட்டுள்ளார். RIP!
நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார். ‘நோ ஒர்க்- நோ பே’ என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து <<16987412>>நாளை நாடு தழுவிய போராட்டம்<<>> அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக கூட்ட மேடையில் அவரது மூத்த மகள் காந்திமதி இருந்தது பேசுபொருளாகியுள்ளது. இவரது மகன் ப்ரீத்திவனே அன்புமணியின் மருமகன். இதனால் ப்ரீத்திவனுக்கு கட்சியில் கை ஓங்குவதாகத் தெரிந்தது. இதனாலேயே காந்திமதியின் மற்றொரு மகன் முகுந்தன் தாத்தா மூலம் கட்சியினுள் நுழைய முற்பட்டார். இதில்தான் அப்பா – மகன் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட மோதல் இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது.
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், விபத்து நடந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடுமாம், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் மழை பெய்யுதா?
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜூலை 21-ல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கஸ்டடியில் அஜித் குமார் கொல்லப்பட்ட சம்பவத்தின் விசாரணை வேகமெடுத்துள்ளது. நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணை அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை, சம்பவம் இடம், போலீஸ் நிலையத்தில் ஆய்வு என நீதிபதி அதிரடி காட்டி இருந்தார். விசாரணை அறிக்கை விவரங்கள் வெளியானால் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<<16954955>>போதை பொருள் வழக்கில்<<>> கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ₹10,000 சொந்த ஜாமினிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புலன் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் பாமக வேட்பாளர்களை முடிவு செய்வதோடு A, B படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி விட்டதால், தேர்தலில் போட்டியிட உள்ளோர் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். GK மணி, AK மூர்த்தி, சையத் மன்சூர் உசேன், புதா அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராமதாஸ் அணியில் உள்ளனர்.
பும்ராவின் சவால் மிகுந்த பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கி., அணி சிறப்பான திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அணியின் ஹெட் கோச் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் 11-ல் இடம்பெறாத பும்ரா, லாட்ஸில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகாஷ் தீப் அபாரத் திறமையை வெளிப்படுத்தியுள்ளதால் இங்கி.,க்கு கடும் போட்டி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.