India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தனாவும் இணைந்து தெலுங்கில் ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். சமீப காலமாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. இருப்பினும், இருவரும் அது குறித்த கேள்வியை தவிர்த்தே வருகின்றனர். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 14ஆவது படத்தில் ரஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 17ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பாக மலர் கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழாவும் மே 17 முதல் 26 வரை நடைபெறுகிறது. இந்த விழாவைக் காண சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
காங்., ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் பலனளித்ததாகக் கூறிய அவர், மோடி ஆட்சியின் கீழ் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றதாகவும் கூறியுள்ளார். அதற்கு உதாரணமாக ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்திய தேசிய தொழில்நுட்ப தினம்
* 1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
* 1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
* 1949 – இஸ்ரேல், ஐநாவில் இணைந்தது.
* 1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை GT தக்க வைத்துள்ளது. அத்துடன், புள்ளிப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இனி வரும் 2 போட்டிகளிலும் GT அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியான ‘கள்வன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பி.பி.ஷங்கர் இயக்கியிருந்த இப்படத்தில் பாரதிராஜா, இவனா, தீனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 14ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் வீசிய புழுதிப் புயல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கோடை வெயில் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் புழுதிப் புயல் வீசி வருகிறது. கடுமையான காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 145 ▶குறள்: எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. ▶பொருள்: இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
பிரம்மா எழுதி, இயக்கி 2015இல் வெளியான ‘குற்றம் கடிதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், தேசிய விருதையும் வென்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் கூறியுள்ளார். எஸ்.கே.ஜீவா என்பவர் எழுதி, இயக்கும் இப்படத்தை சதீஷ் தயாரிக்கிறார். ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Sorry, no posts matched your criteria.