India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ₹1,240 உயர்ந்து 1 சவரன் 22 கேரட் தங்கம் ₹54,160க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் ₹16,000 கோடிக்கு (24,000 கிலோ) தங்கம் விற்பனையானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4,000 கிலோ அதிகமாகும்.
குஜராத்-சென்னை இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில், புதிய வரலாற்று சாதனை பதிவாகியுள்ளது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில்லும், சாய் சுதர்ஷனும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர். குறிப்பாக, ஷுப்மன் கில் அடித்த சதம், ஐபிஎல் தொடரின் 100ஆவது சதம் ஆகும். 2008இல் பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 158*(73) முதல் சதத்தை பதிவு செய்தார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் நலத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை தொடர்ந்து அது கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இம்முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மே 6 முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு நேற்று மாலை வரை 1,24,012 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க மே 20 வரை அவகாசம் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் மூன்று கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்டத் தேர்தல் மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தொகுதியான இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானியை எதிர்த்து காங்., சார்பில் அக்சய் காந்தி களமிறக்கப்பட்டார். கடைசி நேரத்தில் அவர் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதனால், அங்கு காங்கிரசார் நோட்டாவிற்கு வாக்களிக்கும்படி கேட்டு வருகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், நடிகர் தனுஷ் இளைய மகன் லிங்கா 500க்கு 460 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 88, ஆங்கிலத்தில் 90, கணிதத்தில் 96, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 87 என மொத்தம் 460 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் முதல் குரூப் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குகிறது. இம்மலையில் ஒவ்வொரு படிக்கட்டிலிலும் ஏற, ஏற முருகன் வாழ்வில் நம்மை உயர்த்துவார் என்றும், இங்கு வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இங்கு வழிபடுவதன் மூலம் திருமணத் தடை நீங்குவதாகவும் புத்திர பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்வாரா என குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியின்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக, தென்னிந்தியர்கள் ஆபிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா (காங்.,) கூறியதை குறிப்பிட்டு, காங்., கூட்டணியில் இருந்து விலக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் சவால் விட்டிருந்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அளவில் 4 மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா ஸ்ரீ, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா ஜனனி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா ஆகியோர் 4 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஒரு பாடத்தில் 99 மதிப்பெண்ணும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.