India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவிய சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசு பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஷென்சென் 5G ஹை டெக் இன்னோவேஷன் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் & 12 தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் & தனிநபர்கள் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்க நிதி & தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஜுகி, ஸ்விப்ட், வேகன் ஆர், ஆல்டோ, பலினோ உள்ளிட்ட பல்வேறு மாடல் கார்களை விற்பனை செய்கிறது. இந்நிலையில், 4ஆம் தலைமுறை ஸ்விப்ட் மாடல் காரை பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. அந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் மைலேஜ் தரும் எனக் கூறப்படுகிறது. ரூ.6.49 லட்சம்- ரூ.9.65 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவில் 8 மணி நேரம் ஒருவர் தூங்குவது அவசியமாகும். அப்படி தூங்கினால், காலையில் எழுந்திருக்கையில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் இயந்தரமயமான இந்த சூழ்நிலையில், இரவில் தூக்கம் வராமல் பலர் இன்னல் படுகின்றனர். அத்தகையவர்கள், கீழ் காணும் பானங்களில் ஏதேனும் ஒன்றை அருந்திவிட்டு சென்றால், நல்ல தூக்கம் கிடைக்கும். 1) வெதுவெதுப்பான பாடல் 2) இளநீர் 3) வாழைப்பழ ஜுஸ் 4) குங்குமப்பூ கலந்த பாதாம் பால்.
ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் போட்டியில் மும்பை அணிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா. மழை காரணமாக போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற MI, பந்துவீச்சை தேர்வு செய்ததால் KKR முதலில் விளையாடியது. வெங்கடேஷ் ஐயர் 42, ராணா 33, ரஸ்ஸல் 24 ரன்கள் விளாசியதால் KKR அணி 157/7 ரன்கள் எடுத்தது. MI தரப்பில் பியூஷ் சாவ்லா 2, பும்ரா 2, துஷாரா, கம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பல முக்கிய மாற்றங்களை BCCI முன்மொழிந்துள்ளது. அதன்படி, U-23 வீரர்களுக்கான CK நாயுடு டிராபியில் இனி டாஸ் போட்டு, பவுலிங் & பேட்டிங்கை தேர்வு செய்யும் முறை இருக்காது என்றும் ஆடுகளத்திற்கு முதலில் வரும் அணி பேட்டிங் அல்லது பவுலிங்கை தேர்வு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு பலனளித்தால், ரஞ்சி கோப்பையிலும் அறிமுகம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகிரகங்களில் சொகுசு நாயகனான சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். அந்த வகையில் ஏற்பட்ட இடம் மாற்றத்தால் மேஷம், தனுசு, கன்னி, கும்பம் ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகிறது. வாழ்க்கை துணையின் ஆதரவு, உடல்நிலையில் முன்னேற்றம், வீடு, வாகனம் வாங்கும் யோகம், கோடி, கோடியாய் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு என மேற்கண்ட ராசியினருக்கு பண வரவு அமோகமாக இருக்கும்.
WFI முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வரவேற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர்,”வெயில், மழை என பாராமல் போராடிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. நீதிமன்றத் தீர்ப்பு ஆறுதலாக அமைந்துள்ளது. வீராங்கனைகளை கேலி செய்தவர்கள் தற்போது வெட்கப்படட்டும்” என்றார்.
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க துறை வாரியாக செயல் திட்டம் வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உள்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக செயல்திட்டத்தை வகுத்து ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க, தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம், துறை வாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளை தடுக்க முடிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதானி போன்ற தொழிலதிபர்களிடம் ராகுல் காந்தி நிதி பெற்றதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, “அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியபோது, ED & உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கருப்புப் பணம் வாங்கியது தொடர்பாக பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி-திண்டுக்கல் சாலையில் விபத்தில் காவலர் விக்னேஷ்குமார் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர் விக்னேஷ்குமாரின் மறைவு, தமிழக காவல்துறைக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பு எனக் கூறியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவுடன் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.