India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN-ல் முதல்முறையாக உபரி நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க CM ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு உபரி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்கட்டமாக 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாகவும், இது TN முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஷமி மாதாமாதம் கொடுக்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சத்தை உயர்த்தி கொடுக்க வலியுறுத்தி, அவரது EX மனைவி ஹசின் ஜஹான் SC-ல் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோடிகளில் சம்பாதிக்கும் ஷமி, சிறு தொகையையே ஜீவனாம்சமாக வழங்குவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட், ₹4 லட்சம் பெரிய தொகை இல்லையா என கேள்வி எழுப்பினாலும், இது குறித்து விளக்கம் அளிக்க ஷமி, மே.வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை RB உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தவெகவும் CM வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை EPS அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் RB உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் மெகா கூட்டணியில் தவெக இடம்பெறுமா?

2032-ஆம் ஆண்டில் ஒரு சிறுகோள் நமது சூரிய மண்டலத்தின் வழியாக செல்ல உள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் பூமியை பாதுகாப்பாக கடந்து செல்ல 97.9% வாய்ப்பு உள்ளது. இருப்பினும், 2.1% மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, மோதல் ஏற்பட்டால், எந்தெந்த நாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

கோவை இருகூர் தீபம் நகரில் இளம்பெண் ஒருவரை காரில் <<18222861>>கடத்தி செல்லும் சிசிடிவி<<>> காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சியில் கார் நம்பர் தெரியவில்லை என கூறிய அவர், அது கண்டறியப்பட்ட உடன் உண்மை என்ன என்பது தெரியவரும் எனவும் விளக்கியுள்ளார்.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. கேப்டன் குல்பதின் நைப் 50(12) ரன்களும், ஜனத் 46(11) ரன்களும் விளாசினர். 149 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணி, 6 ஓவரில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இறந்துவிட்டதாக ஈமச் சடங்குகள் செய்யப்பட்டவர், உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? சத்தீஸ்கரில் அதுதான் நடந்திருக்கிறது. மகன் புருஷோத்தமனை காணவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர். அப்போது, போலீஸுக்கு கிணற்றில் ஒரு சடலம் கிடைத்தது. அதனை தனது மகன் என நினைத்து புருஷோத்தமனின் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். திடீர் ட்விஸ்டாக உறவினர் வீட்டிலிருந்த புருஷோத்தமன் வீடு திரும்பியுள்ளார். இதை என்ன சொல்வது?

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி ED அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. மேலும் வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 11-ம் தேதி ED அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டது குறித்து வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து யார் வேண்டுமானாலும் போகட்டும், கவலை இல்லை என்ற அவர், எஃகு கோட்டையாக விளங்கும் அதிமுகவில் இருந்து 2 பேர் விலகினால் எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வருவதாக தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அக்.31-ம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81% ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.