India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் பல நன்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு சில பாதிப்புகளையும் அது ஏற்படுத்துமாம். அரைஞாண் கயிறை வருஷக் கணக்கில் இடுப்பில் கட்டுவதால் அதில் அழுக்குகள் கிருமிகள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதனால் நூல் கயிறை தவிர்த்து வெள்ளியில் அணிவது நல்லது என தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளையே(நவ.7) கடைசி நாளாகும். மாணவர்களின் விவரங்களை பிழையின்றி திருத்தம் செய்து பதிவேற்றுவதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT

ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய <<18212147>>பிரேசில் மாடலின்<<>> வாக்காளர் பதிவை India Today ஆய்வு செய்துள்ளது. அதில், பிரேசில் மாடல் வாக்காளர் பதிவின் உண்மையான சொந்தக்காரர் குனியா என்பதும், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்ததும் தெரியவந்துள்ளது. அவரது பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருப்பதையும், அதுவும் வெளிநாட்டு பெண்ணின் புகைப்படத்துடன் இருப்பதையும் கண்டு குனியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனது வீடியோக்களால் மக்கள் மனதில் பயணம் செய்யும் ஆர்வத்தை தூண்டிவந்த பிரபல யூடியூபர் அனுனய் சூட் (32 வயது) அகால மரணமடைந்தார். அமெரிக்காவில் வீடியோ ஷூட் முடித்துவிட்டு வந்து படுக்கையில் விழுந்தவர் காலையில் எழுந்திருக்கவேயில்லை. இவரது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. இன்ஸ்டாவில் 14 லட்சம், யூடியூபில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் வைத்துள்ள இவரின் மறைவு பயண ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. RIP

2 கைகள் இல்லாமல் வில்வித்தையில் பல சாதனைகளை ஷீத்தல் தேவி தொடர்ந்து படைத்து வருகிறார். சமீபத்தில் சீனாவில் நடந்த உலக பாரா வில்வித்தை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது மீண்டும் ஒரு வரலாற்றை படைத்துள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியில் அவர் தேர்வாகியுள்ளார். மாற்றுத்திறனாளி ஒருவர் பொது அணிக்கு தேர்வு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை.

அரசியல் கட்சிகளிடையே சமமற்ற நிலையை ஏற்படுத்தும் ரோடு ஷோவை தடை செய்ய வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பணம் உள்ள கட்சிகள் ரோடு ஷோ நடத்தித் தமக்கு செல்வாக்கு இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இது வாக்காளர்களிடம் தாக்கத்தை உண்டாக்குகிறதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நம் கைகள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மணிக்கட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மணிக்கட்டு வலியை தவிர்க்க, சிறிய உடற்பயிற்சிகள் அவசியம். இவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நரம்புகளை தளர்த்தி, இயக்கத்தை எளிதாக்கும். தினசரி சில நிமிடங்கள், மணிக்கட்டு பயிற்சிக்கும் ஒதுக்கவும். என்னென்ன உயற்பயிற்சிகள் செய்யலாம் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.

பொதுத்துறை வங்கியான SBI-ல் காலியாக உள்ள 541 Probationary Officer (PO) பணியிடங்களுக்கான, மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை <

மும்பையில் இஸ்லாமியர்கள் மேயராக வரமுடியாது என பாஜக நிர்வாகி அமீத் சதாம் கூறியதற்கு உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த ஆனந்த் துபே பதிலடி கொடுத்துள்ளார். மும்பை பாஜக தலைவரானதில் இருந்து அமீத்துக்கு மூளை மழுங்கிப்போனதாக சாடிய அவர், பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்படி பேசுகிறார் என கூறினார். இதனையடுத்து பாஜக நிர்வாகியை சாடிய ஆனந்தே, மராத்தி இந்துதான் மும்பையில் மேயராக வருவார் எனவும் கூறியுள்ளார்.

தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய்தான் CM வேட்பாளர் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நிச்சயம் தவெக தங்கள் கூட்டணிக்கு வரும் என அதிமுக நம்புகிறது. இந்நிலையில், தவெக உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாகவா பேச முடியும் என RB உதயகுமார் கேட்டுள்ளார். நடக்க வேண்டிய நேரத்தில், TN மக்களுக்கு நன்மை தரும் வகையில் அது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக + தவெக கூட்டணி உறுதியாகுமா?
Sorry, no posts matched your criteria.