India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹாலிவுட்டில் நேம் சேக், லைஃப் ஆஃப் பை ஆகிய 2 படங்களில் நடிகை தபு நடித்துள்ளார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருக்கு ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘டூன்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் சீரிஸின் 3வது பாகத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் 2 பாகங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உபா சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் மீதான தடை இன்று முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 1991இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின், விடுதலைப் புலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போது முதல் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செல்ஃபோன் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்பு இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்திற்கு மிக அதிகமான முதலீடு தேவைப்படுவதால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் லாபம் குறைகிறது. அதனை ஈடு செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை மூன்றே வாரங்களில் ரஜினி தொடங்குகிறார். இது ரஜினியின் 172ஆவது படமாகும். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச்சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால், அது குற்ற வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால் பாஸ்போர்ட் பெற அனுமதி தர முடியாது என தெரிவித்துள்ளது.
அஜித் நடித்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் 20ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. வணிக ரீதியாக ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதற்கிடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக, அஜித் ஹைதராபாத் சென்றார். பணப் பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்ததால், விடாமுயற்சி படப்பிடிப்பை அஜர்பைஜானில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
RCB-CSK இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே RCB அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். கடந்த தொடர்களில் மே 18ஆம் தேதி நடந்த 4 ஐபில் போட்டிகளில், RCB அணி தோற்றதே கிடையாது. ப்ளே-ஆஃப்புக்கு முன்னேற, சென்னை அணியின் இலக்கை 18 ஓவர்களில் அடைய வேண்டும் அல்லது 10 பந்துகளுக்குள்ளேயே சென்னை அணியை வீழ்த்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இன்று குமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கனமழை வெளுத்து வாங்கப்போகிறது.
மகப்பேறு நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி அடைந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்த பின்னரும் நிதியுதவி வழங்கப்படாததால், இத்திட்டம் கொண்டு வந்த நோக்கமே சிதைந்து விடுகிறது. மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்கவும், இனி பதிவு செய்யும் கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் நிதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நஜ்முல் ஹொசைன் (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், தன்சித் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி, தன்வீர் இஸ்லாம், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாப் ஹொசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தன்சிம் சாகிப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.