India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், அத்திக்கடவு – அவிநாசி திட்டமும் விரிவுப்படுத்தப்படும் என்றார். அதிமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மும்முனை மின்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
உங்கள் PF இருப்பை SMS மூலம் சரிபார்க்க, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு “EPFOHO UAN TAM” என்ற வடிவத்தில் ஒரு செய்தியை அனுப்பவும். UAN என்ற இடத்தில் உங்களுக்கான யுனிவர்சல் கணக்கு எண்ணை பதிவிட வேண்டும். TAM என்பது தமிழ்நாட்டை குறிக்கும். Try பண்ணி பாருங்க மக்களே..
மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக வேண்டும் என CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மேயர் இந்திராணியின் கணவன் பொன் வசந்தை கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரையின் நிழல் மேயராக பொன் வசந்த் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, வேலூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதமடித்து (100 டிகிரி பாரன்ஹீட்) மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 2 நாள்களுக்கு வெயில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதனால், வீட்டில் இருந்து பகல் 11 மணி – மதியம் 3 வரை வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே..!
பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, பழைய சம்பவம் மறந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார் இபிஎஸ். 1991-ல் பாஜகவோடு கூட்டணி வைத்தீர்களா இல்லையா? 2001 தேர்தலில் கூட்டணி வைத்தீர்களா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? என்றதுடன், நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓய்வு நேரம் குறைந்தால், மன அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து அதிகம் என அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த ஓய்வு எடுப்பவர்கள், குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனராம். அதேநேரம், அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பதும் உடல், மன நலத்தை பாதிக்குமாம். அதீத ஓய்வால் பிபி, மன அழுத்தம், தூக்கமின்மை, அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே அவசியம் ஓய்வெடுங்க.. அளவாக!
ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போர் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், நேற்றிரவு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹூதி கிளர்ச்சிப் படை. இதையடுத்து ஏமனின் துறைமுகங்கள், மின்னுற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹூதி நடத்தியுள்ளது. காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், மீண்டும் மோதல்கள் நடப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
*கர்ப்ப காலம், பிரசவ காலத்துக்கு பிறகு பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சருமச் சுருக்கங்களை நீக்கக் கற்றாழை ஜெல்லை தடவலாம். *நீர்க்கடுப்பு, நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், உடல்சூடு போன்றவற்றையும் சோற்றுக்கற்றாழை குணப்படுத்தும். *கற்றாழை மடலை கீறி, அதில் வடியும் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். அதை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா சம்பவத்தை போல் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்து அமைப்பு நிர்வாகி சமித் ராஜூவின் செல்போனில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.