News May 16, 2024

கை விரலுக்கு பதில் தவறாக நாக்கில் ஆபரேஷன்

image

கேரளாவில் 4 வயது சிறுமிக்கு கைகளில் இருந்த 6 விரல்களில் ஒன்றை அகற்ற முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் கைக்குப் பதிலாக வாயில் கட்டு போடப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் விசாரித்ததில், தவறாக நாக்கில் ஆபரேஷன் நடந்தது தெரிய வந்தது. ஒரே நாளில் 16 ஆபரேஷன் நடந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், விரைவில் ஆறாவது விரல் அகற்றப்படும் என மருத்துவமனை சமாளித்துள்ளது.

News May 16, 2024

இடைவிடாமல் பெய்து வரும் கனமழை

image

கோவை, நீலகிரி, குமரி, திண்டுக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருவதால் கோடைகாலம், குளிர்காலமாக மாறியுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்வதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

நிதி நிறுவனங்களுக்கு RBI அறிவுரை

image

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) கடன் வழங்க பின்பற்றும் அல்காரிதம் அடிப்படையிலான வழிமுறைகளை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே.சுவாமிநாதன், “NBFCகள் பலம் & பலவீனங்களை விழிப்புடன் அணுகி, பயனாளியின் தரவை தொடர்ச்சியாக சரிபார்க்க வேண்டும். அத்துடன், விரைவாக கடன் வழங்கும் முறையை கவனமாகப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

News May 16, 2024

மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்

image

ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் GT – SRH இடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை சற்று குறைந்த பின் டாஸ் போடப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும். ஏற்கெனவே GT அணியின் கடைசிப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

4 கைகள், 3 கால்களுடன் பிறந்த இரட்டை குழந்தை

image

4 கைகள், 3 கால்களுடன் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகளின் ஒரு கால் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேசின் சமீபத்திய அறிக்கைப்படி, 2018இல் இந்தோனேசியாவில் இந்த குழந்தைகள் பிறந்தன. 20 லட்சம் பேரில் ஒரு குழந்தை இவ்வாறு பிறப்பதாகக் கூறப்படுகிறது. உயிருக்கு போராடி வந்த இந்த குழந்தையின் ஒரு கால் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், அவர்களால் உட்கார முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News May 16, 2024

அரண்மனையில் பிறந்தவர்கள் கடினமாக உழைக்க மாட்டார்கள்

image

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் அதற்கான காரணம் கூற INDIA கூட்டணித் தலைவர்கள் பலி ஆட்டைத் தேடுவார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுக்குப் பின் INDIA கூட்டணி சுக்குநூறாக உடையும் என்றார். மேலும், அரண்மனையில் பிறந்த வாரிசுகள் கடினமாக உழைக்க மாட்டார்கள் என ராகுல், அகிலேஷை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.

News May 16, 2024

ப்ளே ஆஃப் சுற்றுக்கு SRH அணி முன்னேறாது!

image

நடப்பு ஐபிஎல் தொடரில் SRH அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “SRH அணி அடுத்த 2 போட்டிகளில், தோற்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். KKR, CSK, RCB, RR ஆகிய 4 அணிகள் ப்ளே ஆஃப்க்கு முன்னேறலாம்” என்றார். இந்த சர்ச்சைக் கருத்தால் சீற்றமடைந்த SRH அணியின் ரசிகர்கள் கடும் சொற்களால் அவரை அர்ச்சித்து வருகின்றனர்.

News May 16, 2024

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

image

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கைதாகி வருவது தற்போது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், நாகை கோடியக்கரை அருகே, இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்த கடலோர காவல்படையினர், அவர்கள் அனைவரையும் கடலோர காவல் குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

News May 16, 2024

அதிகாரிகளுக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை!

image

காவிரி ஆணையக் கூட்டத்தில் நேரில் பங்கேற்க அதிகாரிகளுக்கு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதிகாரிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே டெல்லி கூட்டத்தில் பங்கேற்க திமுக அரசு அனுமதி அளித்துள்ளதாக இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அறிக்கை வாயிலாக பதிலளித்த தமிழக அரசு, அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ள தேவையான அனுமதியை அரசு உடனுக்குடன் அளிக்கிறது” எனக் கூறியுள்ளது.

News May 16, 2024

தோனி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார்

image

ஐபிஎல்லில் தோனி மேலும் 2 ஆண்டு விளையாடுவார் என சிஎஸ்கே முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். தோனி தற்போதும் நன்றாக பேட்டிங் செய்வதாகவும், ஓய்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க மாட்டார் என நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தோனி அனைத்தையும் தன் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார், வெளியில் சொல்ல மாட்டார் என்ற ஹஸ்ஸி, அவரது முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!