News May 16, 2024

இந்த வரைபடங்களை பயன்படுத்தினால் சிறை

image

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘சர்வே ஆஃப் இந்தியாவின் வரைபடங்களுடன் ஒத்துப்போகாத இந்திய வரைபடத்தை வெளியிடும் நபருக்கு அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது 2 தண்டனையும் ஒருசேர விதிக்கப்படும், எனவே உயர்கல்வி நிறுவனங்கள் இந்த சட்டத்துக்கு இணங்குவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

News May 16, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – ஓய்வு தேவை
*ரிஷபம் – குழப்பம் உண்டாகும்
*மிதுனம் – ஆரோக்கியமான நாள்
*கடகம் – வெற்றி கிடைக்கும்
*சிம்மம் – சுகபோக வாழ்க்கை
*கன்னி – நட்பு வட்டம் உயரும்
*துலாம் – அமைதி தேவை
*விருச்சிகம் – சலனம் உண்டாகும்
*தனுசு – முயற்சிக்கேற்ற பலன்
*மகரம் – ஆர்வம் அதிகரிக்கும் *கும்பம் – பயம் ஏற்படும் *மீனம் – பகை உண்டாகும்

News May 16, 2024

காவிரியில் 2.5 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்!

image

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. ஒழுங்காற்று குழுவின் 96ஆவது கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக சார்பில் ஆஜரான அதிகாரிகள் “அணைகளில் போதிய அளவு நீர் இல்லை” எனக் கூறினர். இதனை நிராகரித்த ஒழுங்காற்று குழு, மே மாதத்திற்கான நீரை திறந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

News May 16, 2024

கெஜ்ரிவால் உதவியாளர் தாக்கியது குறித்து எம்பி புகார்

image

கெஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து அவரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரித்தனர். அப்போது 2 பக்க விரிவான புகாரை ஸ்வாதி மாலிவால் அளித்ததாகக் கூறப்படுகிறது.

News May 16, 2024

புஷ்பா-2 படத்தில் இருந்து விலகிய பிரபலம்?

image

இந்திய சினிமா உலகின் முன்னணி படத் தொகுப்பாளராக இருப்பவர் ஆண்டனி ரூபன். அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவாகிவரும் ‘புஷ்பா-2’ படத்திலிருந்து எடிட்டர் ஆண்டனி ரூபன் விலகியுள்ளார். ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தால், அவர் இப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தெறி, வேதாளம், ரெமோ, அண்ணாத்த, ஜவான் போன்ற படங்களில் அவர் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது SRH

image

நடப்பு ஐபிஎல் சீசனில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி முன்னேறியது. குஜராத்-ஹைதராபாத் அணிகள் இன்று மோதவிருந்த 66ஆவது லீக் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக முன்னேறியது. இதனிடையே, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

News May 16, 2024

9 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யும்

image

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காலையில் இருந்து லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கோவையில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மழையால் தண்ணீர் தேங்கி சாலைகளில் வழுக்கும் சூழல் உண்டாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

அரசுப் பேருந்துகளை கவனமாக இயக்க உத்தரவு

image

கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

News May 16, 2024

₹14,769 கோடி வருவாய் ஈட்டிய எச்.ஏ.எல்

image

2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) ₹14,769 கோடியை ஒருங்கிணைந்த வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹12,494 கோடியாக இருந்த வருவாய் தற்போது 18% உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 52.2% உயர்ந்து, ₹4,309 கோடியாக உள்ளது.

News May 16, 2024

புதிய அரசின் திட்டம் ரெடி

image

தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கும் புதிய பாஜக அரசின் திட்டம் தற்போதே ரெடியாக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, மத்தியில் மீண்டும் பாஜக அரசு ஆட்சி அமைந்ததும் முதல் நாளிலேயே திட்டங்களை செயல்படுத்தும் பணி தொடங்கும் என்றார். கடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மோடி, புதிய அரசின் 100 நாள் திட்டத்தை வகுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!