News May 17, 2024

இனி வாட்ஸ்ஆப் மூலம் EB கட்டணம் செலுத்தலாம்

image

வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்கள், வாட்ஸ்ஆப் செயலி மூலம் யுபிஐ (UPI) வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம். 94987 94987 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி, அதில் வரும் வழிமுறைகளை பின்பற்றி மின் கட்டணம் செலுத்தலாம். இதன் மூலம், வீட்டில் இருந்தபடியே உங்கள் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

News May 17, 2024

ஏன் பேட்டியளிப்பதில்லை? மோடி விளக்கம்

image

பிரதமராக பதவியேற்றது முதல் ஊடக செய்தியாளர்களுக்கு மோடி இதுவரை பேட்டியளித்ததில்லை. இதுகுறித்து ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஊடகங்கள் நடுநிலையுடன் இல்லை எனவும், ஊடக செய்தியாளர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கருத்தியலை மக்களிடையே திணிக்க முயற்சிப்பதாலும், அவர்கள் செல்லும் தவறான பாதையில் தான் செல்ல விரும்பவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

News May 17, 2024

39% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

image

நாடு முழுவதும் நான்கு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்த 3 கட்ட வாக்குப்பதிவுகள் மே 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், மே 25இல் நடைபெறும் ஆறாவது கட்டத் தேர்தலில், மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 338 பேர் (39%) கோடீஸ்வரர்கள் என்பது அவர்களது வேட்புமனு மூலமாக தெரிய வந்துள்ளது. அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹6.21 கோடியாக உள்ளது.

News May 17, 2024

பொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு

image

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

நீர்வழி வர்த்தகம் எளிதாகும்

image

மேற்கு & மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் நீர்வழி வர்த்தகத்தை சாபஹார் ஒப்பந்தம் எளிமையாக்கும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பிராந்திய அரசியலில் தூதரக ரீதியில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா கடல்சார் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்றார்.

News May 17, 2024

IPL: முதல் போட்டியில் எந்தெந்த அணிகள் மோதின தெரியுமா?

image

கிரிக்கெட் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஐபிஎல், 2008இல் தொடங்கியது. இதன் முதல் போட்டி, ஆர்சிபி, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா, 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. மெக்கல்லம் 158 ரன் விளாசினார். இதையடுத்து விளையாடிய ஆர்சிபி, 82 ரன்னில் சுருண்டது. டிராவிட் 2, கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா 140 ரன் வித்தியாசத்தில் வென்றது.

News May 17, 2024

பள்ளிகள் திறப்பு எப்போது?

image

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால், வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளித்திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், இம்மாத இறுதியில் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

News May 17, 2024

‘கங்குவா’ படத்தில் 10,000 பேர் பங்கேற்ற போர் காட்சி

image

‘கங்குவா’ படத்தில், மிகப்பெரிய போர் காட்சி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட 10,000 பேர் நடித்துள்ள அந்தப் போர் காட்சிகள், ரசிகர்களை மிகவும் கவரும் என்றும், 2024ஆம் ஆண்டு வெளியாகும் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘கங்குவா’ இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

News May 17, 2024

மைதானங்களின் எல்லையை நீட்டிக்க வேண்டும்

image

இந்தியாவில் இருக்கும் அனைத்து மைதானங்களிலும் பவுண்டரி எல்லையை நீட்டிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது ஒரு சில ஓவர்களுக்குப் பிறகு, பந்து ஸ்விங் ஆவது நின்று விடுகிறது. பேட்டுக்கும், பந்துக்கும் நடுவில் சம நிலையான போட்டி தேவைப்படுகிறது. பந்துவீச்சாளர்களை பாதுகாக்க பிசிசிஐ சில மாற்றங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

News May 17, 2024

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும்

image

தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 21ஆம் தேதி வரை 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதி, கேரளா-கர்நாடகா கடலோரப் பகுதி, இலங்கை கடலோரப்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!