India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே – 18 | வைகாசி- 5
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 10:30AM -11:30AM, 04:30PM-05:30PM
▶கெளரி நேரம்: 12:30 AM – 01:30 PM, 09:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர்
▶ திதி : அதிதி
ஐபிஎல் தொடரில் 6ஆவது முறையாக லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் 500 ரன்களை கடந்துள்ளார். மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் 55 ரன்களை எடுத்ததன் மூலம் நடப்பு தொடரில் அவர் 500 ரன்களை எடுத்துள்ளார். 14 போட்டியில் விளையாடிய அவர், 520 ரன்களை குவித்தார். முன்னதாக, கடந்த 2018, 2019, 2020,2021,2022 ஐபிஎல் தொடரில் 500 ரன்களை கடந்துள்ளார். 2018இல் ராகுல் 659 ரன்கள் எடுத்ததே இதுவரை அவரின் அதிகபட்ச ரன்னாக உள்ளது.
வாக்குப்பதிவு விவரங்களை விரைவாக வௌியிட கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்குப்பதிவு விவரங்களை உடனடியாக வெளியிட தேர்தல் ஆணையம் ஏன் தயங்குகிறது என்று கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கு விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புங்க மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இவை சரும நோய்களைப் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகும். புங்கம் வேர்பட்டைச் சாறு (புங்கம் பால்) உடலை பலப்படுத்த உதவுகிறது. புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து அரை தேக்கரண்டி காலை, மாலை என 2 அல்லது 3 மண்டலம் தேனில் சாப்பிட்டு வர 20 வகை மேக நோயும் நீங்கும். மேலும், உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
மதத்தை வைத்தே பாஜக பரப்புரை செய்து வருவதாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியே நாட்டை மீண்டும் ஆள போகிறது என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதனால் தான் பிரதமரின் பரப்புரைகளில் அதீத பதற்றம் தெரிவதாக விமர்சித்தார். முஸ்லிம் மக்களை விமர்சித்து வந்த மோடி, தோல்வி பயத்தின் காரணமாக, தற்போது முஸ்லிம் மன்னர்களை எல்லாம் புகழ்ந்தது பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
➤ தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள், வெற்றிக்கான வழி கிடைக்கும்.
➤ தனது இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான்.
➤ ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.
➤ நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடாவை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது. ஆசிய போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை பர்வீன் உறுதி செய்திருந்தார். இருந்தாலும், ஊக்க மருந்து சோதனை நடத்த கடந்த 1 வருடமாக அவர் ஒத்துழைக்க மறுத்ததாக கூறி, அவருக்கு 1.5 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2027இல் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது. சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) சிறப்பு கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் 2027ஆம் ஆண்டுக்கான 10ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. இதில், பிரேசில் 119-78 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை நடத்துவதற்கான அனுமதியை பெற்றது.
➤ 332 – குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை ரோம பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.
➤ 1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக தேர்வு செய்யப்பட்டார்.
➤1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்பட்டது.
➤2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
➤2015 – கொலம்பியாவில் மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக வாரணாசியில் அஜய்ராய் போட்டியிடுகிறார். ஏற்கெனவே கடந்த 2014 மற்றும் 2019 என 2 முறை மோடியை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். 2014இல் 7.34%, 2019இல் 14.38% வாக்குகளை பெற்று அவரால் 3ஆவது இடத்தையே பெற முடிந்தது. இந்த முறை அகிலேஷ் யாதவுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால், கணிசமான அளவு வாக்குகளை அவர் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.