India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புயல் என்ற வார்த்தையானது, கிரேக்க வார்த்தையான சைக்ளோஸ் என்பதிலிருந்து உருவானது ஆகும். 1800களில் புயலுக்கு கத்தோலிக்க மதத் தலைவர்களின் பெயர்கள் வைக்கும் பழக்கம் இருந்தது. 1953க்கு பிறகு புயலுக்கு பெண்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. பிறகு 1979இல் ஆண்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. மணிக்கு 62 கி.மீ.க்கும் மேல் வேகத்தில் புயல் வீசினால், அதற்கு சிறப்பு பெயர் வைக்கும் நடைமுறை தற்போது உள்ளது.
தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த சூழலில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே வேளையில் நாளை வரை ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தன் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் பாஜகவில் இணையவுள்ளதாக சில பேச்சுக்கள் அடிபட்டன. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசியத் தலைவர் நட்டா, மாலிவாலை இதுவரை தான் சந்தித்தது கிடையாது எனவும், அவர் மனதில் என்ன இருக்கிறது என தனக்குத் தெரியாது என்றும் கூறினார். மேலும், இதுபோன்ற பேச்சுக்கள் பிரச்னையை மடைமாற்றும் வேலை என அவர் குற்றம் சாட்டினார்.
சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016இல் அம்மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட, அசாமைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அமீருல் இஸ்லாமிற்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த ஐகோர்ட், தண்டனையை உறுதி செய்தது.
ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டிகள், நாளை முதல் தொடங்க உள்ளது. 3 லீக் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், ப்ளே-ஆஃப் போட்டிகளில் மழை பெய்தால் என்ன ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முடிந்த வரை கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு போட்டிகளை அன்றைய தினமே முடிக்க முயற்சிக்கப்படும். இல்லையென்றால், ரிசர்வ் டே வழங்கப்படும். இந்த சீசனில் இருந்து அனைத்து ப்ளே-ஆஃப் போட்டிகளுக்கும் ரிசர்வ் டே உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
KKR-SRH இடையேயான ஐபிஎல் Qualifier 1 போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கும், தோல்வி அடையும் அணி Qualifier 2 போட்டிக்கும் செல்லும். தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 26ஆம் தேதி மோதும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சத்தீஸ்கரில் லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 25-30 பேர் கொண்ட குழுவினர், கவர்தா அருகே லோடு வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம், கோவை உள்பட 30 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கும் என எச்சரித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘கல்கி 2898 AD’ படம் வரும் ஜூன் 27ஆம் தேதியும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கி வரும் ‘தக் லைஃப்’ படம் இந்தாண்டு இறுதியிலும், ‘இந்தியன் 3’ படம் 2025 ஜனவரி மாதத்திலும் வெளியிட படக்குழுக்கள் திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.