India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல் முகாமை வரும் 15-ம் தேதி சிதம்பரத்தில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனிடையே, இன்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கவுள்ளது. இப்பணி 3 மாதங்கள் நடைபெறும் எனவும் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
2021-23-ல் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ₹397 கோடி முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால், மீண்டும் ED உள்ளே வரலாம் எனவும் அது கைது வரை கூட நீள வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
2026 தேர்தல் பரப்புரையை இபிஎஸ் இன்று தொடங்குகிறார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பிரசித்திபெற்ற வனபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தும் இபிஎஸ் இன்று மட்டும் 62 கி.மீ பயணம் செய்ய உள்ளார்.
★1456: தூக்கிலிடப்பட்ட 25 ஆண்டுகள் கழித்து ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது ★1575: இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது ★1799: ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூர் அடுத்துள்ள பகுதிகளைப் கைப்பற்றினர் ★1865: ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான 4 பேர் தூக்கிலிடப்பட்டனர் ★1981: இந்திய கிரிக்கெட் அணி Ex. கேப்டன் தோனியின் பிறந்தநாள் இன்று.
கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவரான பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில், நயினாரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகி, அரியணையை அண்ணாமலைக்கு கொடுங்கள் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவாளர்களையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது என பிரிக்ஸ் மாநாட்டில் PM மோடி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய அவர், தீவிரவாத தடுப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் கடுமையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதோடு காஸா நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி வேலைநாளாகும். அதேபோல், யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராணிப்பேட்டையின் சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாகும். SHARE IT.
‘ஜனநாயகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ டாக்டர் கனவு தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடி உள்ளது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு முன் டாக்டராக வேண்டுமென தான் கனவு கண்டதாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த தனது தந்தை எதிர்பாராவிதமாக டாக்டராகி விட்டதாகவும் கூறினார்.
உடல் ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி மிகவும் அவசியம், மேலும் இது பல நோய்களைத் தடுக்க உதவும். பெரியவர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் (தோராயமாக 3 கிலோமீட்டர்) நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப இதை 4,000 முதல் 10,000 அடிகள் வரை மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நடைபயிற்சி தூரம் வேறுபடலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
தமிழகத்தில் தங்களது கூட்டணி ஆட்சி அமையும் என அண்மையில் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு அதிமுக உடன்படவில்லை என இபிஎஸ் இதுநாள் வரை தெளிவாக தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி சுற்றுப்பயணத்தை துவங்கும் இபிஎஸ் அதனை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய மடலில், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.