India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தாவுக்கு எதிரான முதல் Qualifier போட்டியில், ஹைதராபாத் வீரர் ராகுல் திரிபாதி அதிரடி காட்டி வருகிறார். தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் அகமது ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ராகுல் பொறுப்புடன் விளையாடி வருகிறார். 7 Four, 1 Six என விளாசிய அவர், 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. SRH அணி எவ்வளவு ரன் குவிக்கும்?
காமெடி நடிகர் கூல் சுரேஷ் சிஎஸ்கே என்ற பெயரில் கட்சியை தொடங்க உள்ளதாகவும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று
தான் CSK கட்சியை தொடங்குவது உறுதி என்று அவர் கூறியுள்ளார். விஜய் விருப்பம் தெரிவித்தால் தமிழக வெற்றிக் கழகத்துடன் சிஎஸ்கே கட்சி பயணிக்கும் என்றார். மேலும், இது தவெகவிற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், குமரியில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூரும் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான ப்ரீ புரடக்ஷன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை மாதம் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிஜேடியுடன் கூட்டணி அமையாததற்கு வி.கே.பாண்டியன் தான் காரணம் என பாஜக முக்கிய தலைவர்களே கூறிய நிலையில், நேற்றைய பரப்புரையில் பிரதமரின் பேச்சில் அது அனலாக தெறித்தது. மோடி, வி.கே.பாண்டியனின் பெயரை கூறவில்லையே தவிர, பரப்புரை முழுவதும் அவரை வசை பாடினார். பிஜேடியின் அடுத்த முகமாக அவர் முன்னிலைப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார்.
யாரையும் எளிதில் நம்பாத நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். அதிகாரியான அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தார். அவரின் விருப்பத்தை புரிந்துகொண்ட பாண்டியனும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்று, பிஜேடியில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடன் தேர்தலுக்கான வேலைகளில் தீவிரம் காட்டிய அவர், பாஜகவுடன் கூட்டணியை ஏற்படுத்த முயன்ற நிலையில், அது தோல்வி அடைந்தது.
புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழகத்தை தேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக பிரதமர் மோடி நேற்று விமர்சித்திருந்தார். 2000 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணமுடித்த பின்பு, அம்மாநில பணிக்கு மாறினார். 2011இல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் ஆனார்.
கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கருவின் பாலினத்தை ஸ்கேன் செய்யும் மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. யூடியூபர் இர்ஃபானின் வீடியோவை பார்த்து பலர் அதை பகிர்ந்துள்ளதாகவும், இத்தகைய செயலால் தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையும் எனவும் கவலை தெரிவித்தது.
KKR-க்கு எதிரான முதல் Qualifier போட்டியில், SRH பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட்(0), அபிஷேக்(3), நிதீஷ்(9), ஷாபாஸ்(0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஹைதராபாத் அணி 5 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இது அந்த அணி அதிக ரன்கள் அடிக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமடைய செய்துள்ளது.
இந்திய நாட்டின் மக்களே தன்னுடைய வாரிசுகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எப்போதெல்லாம் ஓரணியில் சேர்கிறார்களோ அப்போதெல்லாம் நாட்டில் வகுப்புவாதம், சாதிவாதம், வாரிசு அரசியல் முன்னிலைப்படுத்தபடுவதாக கூறிய அவர், மக்கள் பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுப்பதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என்றார். பிஹார் மக்களுக்கு எதிராக தமிழக தலைவர்கள் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.