India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, கார்த்திக் பற்றி சுசித்ரா அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி கார்த்திக் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இளைஞர்கள், பெண்களின் பிரதிநிதியாக கங்கனா ரனாவத் தேர்தலில் களம் காண்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். மண்டி தொகுதியில் கங்கனாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், 5 கட்டத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை கடந்து விட்டதாகவும், இமாச்சலில் பெறும் வெற்றி கேக் மீது செர்ரி பழத்தை வைப்பதற்கு ஒப்பானது என்றார். மக்களின் வாக்குகள் 500 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்து, அயோத்தியில் கோயில் கட்ட வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மாவட்டந்தோறும் உள்ள குடோன்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தேவையான அளவு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மழையால் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரையிறுதியில் தோல்வியடைந்த RCB குறித்து CSK முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு X தளத்தில் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. RCBக்கு ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடியிருந்தால், RCB பல கோப்பைகளை வென்றிருக்கும் என கூறியுள்ளார். இதையடுத்து அவர், மறைமுகமாக கோலியை விமர்சித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சேமிப்பை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதன் மூலம் நமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் FD, RD மூலம் பணத்தைப் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பதாகவும், ஆனால், அதில் வரும் வட்டியை பணவீக்கமே விழுங்கிவிடும் எனவும் கூறுகின்றனர். பணவீக்கத்தை மிஞ்சும் படி, ஆண்டுக்கு குறைந்தது 10% ரிட்டர்ன் தரும் முதலீட்டை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொய் சொல்லவும் ஒரு எல்லை இருப்பதாக பாஜகவை ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் விமர்சித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்துவரும் தன் மீது, பாஜக அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாக அவர் குற்றம் சாட்டினார். முன்னதாக, நவீன் பட்நாயக் சுயமாக முடிவெடுக்கவில்லை என்றும், வி.கே.பாண்டின் அவரை இயக்குவதாகவும் பாஜக மூத்த தலைவர்கள் அவரை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்துள்ளனர். இதனிடையே சேலம், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு அணியிலிருந்து மேக்ஸ்வெல்லை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் அற்புதமாக விளையாடும் மேக்ஸ்வெல், பெங்களூரு அணியில் மட்டும் சொதப்புவதாக கூறிய அவர், மேக்ஸ்வெல்லை நீக்கினால் மட்டுமே RCB அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றார். 2024 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர், வெறும் 52 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
3ஆவது முறையாக மோடி பிரதமராக தேர்வானதும் ‘வல்லரசு இந்தியா’ என்ற இலக்கை நோக்கி பயணிக்க இருப்பதாக பாஜக தேசியத் தலைவர் நட்டா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் பிரசாரம் செய்த அவர், உ.பி., பாதுகாப்பற்ற இடமாகவும், மாஃபியாக்களின் ராஜ்ஜியமாக இருந்ததாகவும் தெரிவித்தார். தற்போது, மோடியின் ஆசிர்வாதத்தாலும், யோகி ஆதித்யநாத்தின் கடின உழைப்பாலும் மாநிலம் முற்றிலுமாக மாறியுள்ளதாகக் கூறினார்.
வீட்டு காவலாளியை தாக்கியப் புகாரில் கைதான ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து அவரை வெளியே அழைத்துச் சென்ற போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.