India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1456ம் ஆண்டு – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.1575ம் ஆண்டு – இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது.1799ம் ஆண்டு – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.1865ம் ஆண்டு – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
நடிகர் விஷ்ணு விஷால் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் பெயர் வைத்துள்ளார். விஷ்ணு விஷால் முன்னாள் பேட்மிட்டன் வீராங்கணை ஜுவாலா கட்டா தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெண்குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமீர்கான் குழந்தைக்கு மிரா என பெயர் வைத்துள்ளார். மிரா என்றால் நிபந்தனை அற்ற அன்பு மற்றும் அமைதி என பொருள்.
பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஷகிலா அளித்த பழைய பேட்டி வைரலாகிறது. அதில் தான் சின்ன பெண்ணாக இருக்கும் போது, ஆண் நண்பர் ஒருவரால் கர்ப்பம் ஆனேன் என்றும், தனது வயதை கணக்கில் கொண்டு தனக்கு கருகலைப்பு செய்துவிட்டார்கள் என தெரிவித்தார். அந்த நேரத்தில் என் அம்மா செய்தது சரியான முடிவு என நினைக்கிறேன் என்றார். சம்மந்தப்பட்ட நபருடன் தற்போதும் தான் பேசிவருவதாகவும் கூறினார்.
உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் தெரிவித்த நிகிதா, தன்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிவிட்டார் என்றும், 3க்கும் மேற்பட்ட திருமணங்களை அவர் செய்திருப்பதாகவும் திருமாறன் என்பவர் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிகிதா, திருமாறன் உடனான உறவு எப்போதோ முடிந்துவிட்டது என்றும், ₹10 லட்சம் வாங்கிக்கொண்டு நான் விவாகரத்து கொடுத்தேன் என அவர் கூறுவது அப்பட்டமான பொய் என்றார்.
*”தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம், அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுங்கள்”, *”கடின உழைப்பைச் செலுத்தி முடிவுகளைப் பெறுவது முக்கியம்”. *”எல்லாமே உங்கள் வழியில் செல்லும் நல்ல நேரங்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கடினமான காலகட்டத்தை கடக்கும்போது நிறைய கற்றுக்கொள்கிறீர்கள்”*”வெற்றி என்பது இலக்கு அல்ல, அது ஒரு பயணம்.” * “நீங்கள் கூட்டத்திற்காக விளையாடுவதில்லை, நாட்டிற்காக விளையாடுகிறீர்கள்.”
SC முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் பதவி வகித்தப் போது வசித்த அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளார் என புகார் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், தனது மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் தசை நோய் உள்ளதாகவும், அதற்காக எய்ம்ஸில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தான் ஏற்கனவே SC நீதிபதிகள், அலுவலர்களிடம் விளக்கமளித்திருப்பதாகவும் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தற்போது ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. அதைப்போன்று கர்நாடகா பாஜக எம்.பிக்கள், மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என காங்., குற்றம் சுமத்தியது. இதற்கு பதிலளித்த குமாரசாமி, தமிழக கூட்டணி கட்சிகளிடம் காங்., சம்மதம் பெற்றால், மேகதாது திட்டத்திற்கு பிரதமரிடம் பேசி 5 நிமிடத்தில் அனுமதி பெற்று தருவேன் என தெரிவித்தார்.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.
அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜாவை நியமித்துள்ளார். டெல்லியில் பிறந்த இவர், தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைகழகத்தில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 8 வருடங்களாக டெஸ்லாவில் பணிபுரிந்தும் வருகிறார். கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் நியமிப்பதா என எலான் மஸ்க் மீது விமர்சனங்களும் வந்துள்ளன.
▶ஜூலை 7- ஆனி – 23▶ கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
Sorry, no posts matched your criteria.