India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்புலன்ஸ் விவகாரத்தில் <<17450249>>EPS<<>> இத்துடன் நிறுத்துக் கொள்வது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். ஆம்புலன்ஸ் பயணிக்கும் பிரதான சாலைகளில் EPS பிரச்சாரம் செய்வதாகவும், ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டுவது அவரது தரத்தை குறைத்துவிடும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, இனி தன்னுடைய பிரச்சாரத்திற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வந்தால், அதன் டிரைவர் பேஷண்ட் ஆவார் என EPS எச்சரித்து இருந்தார்.
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10-ம் தேதி சவரனுக்கு ₹75,560-க்கு விற்பனையான தங்கம் விலை, சுமார் ₹1,680 வரை குறைந்து இன்று ₹73,880க்கு விற்பனையாகிறது. 10 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த வெள்ளி விலையும் இன்று ₹1000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் சூழல் இருப்பதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் வேணி (71) மாரடைப்பால் காலமானார். 1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்துள்ள இவர், கணவர் இறந்த பின்பு, அவரது ₹5 சேவையை தொடர்ந்து வந்தார். அவருடைய இழப்பை கேட்டு சென்னை மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். முன்னதாக, இவரது கணவர் டாக்டர் ஜெயச்சந்திரன் 48 ஆண்டுகளாக ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கடந்த 2018-ல் காலமானார்.
1. பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
2. இந்தியாவின் முதல் ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டது?
3. ஆபரேஷன் Blue Star எந்த ஆண்டு நடந்தது?
4. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவர் யார்?
5. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை?
பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
மதுரையில் ஆக., 21-ல் நடக்கவுள்ள தவெகவின் 2-வது மாநாடு மழையால் தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றைய தினம் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அதீத வெப்பம் நிலவும் எனவும், மாலையிலும், இரவிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதனால், மாநாட்டிற்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது INDIA கூட்டணி. இதற்காக, மகாத்மா காந்தியின் பேரனான துஷார் காந்தியின் பெயரை பரிந்துரைத்துள்ளாராம் NCP-ன் சரத் பவார். அதோடு, கட்சி சார்பு இல்லாத முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய இறுதி முடிவை காங்., தலைவர் கார்கே இன்று எடுக்கவுள்ளார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
தொடக்கத்தில் ஒன்றாக நடித்த ரஜினியும் கமலும், பிறகு வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர். இந்நிலையில், இருவரையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘கூலி’ படத்தின் ரிலீசுக்கு முன், இருவரையும் சந்தித்து அவர் ஒரு கதை சொன்னதாகவும், இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லோகி இயக்கத்தில் ரஜினியும்- கமலும்.. எப்படி இருக்கும்?
NDA-வின் து.ஜனாதிபதி வேட்பாளராக CPR-ஐ களமிறக்கியதற்கு பின்னால் கொங்கு வாக்காளர்களை கவரும் பாஜகவின் பிளான் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு, CPRஐ திமுக ஆதரிக்க தவறினால் அது அவர்களுக்கு பேக் ஃபயர் ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அதே கொங்கு பெல்ட்டை சேர்ந்தவரான இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாம். திமுகவின் இந்த மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகுமா?
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.