India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி இடையேயான பிரச்னை கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது சீமானுடனான சில வீடியோக்களை வெளியிடப் போவதாக விஜயலட்சுமி மீண்டும் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் இதேபோல் கூறுவதும், பிறகு பேக் அடிப்பதுமாக விஜயலட்சுமி இருந்து வருகிறார். அதேபோல் இதுவும் வெற்று மிரட்டலா?இல்லை உண்மையா? எனத் தெரியவில்லை.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் உள்ள கடைகளில் அதிக விலையிலான பிஸ்கட், கூல் டிரிங்ஸ் பாட்டில்கள் உள்ளிட்டவையே விற்கப்படுகின்றன. சம்சா, பப்ஸ் போன்றவற்றின் விலையும் 2 மடங்குக்கும் மேல் அதிகமாக உள்ளது. தேநீர் கடைகளில் டீ, காபி ரூ.20- ரூ.25 வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்க எந்த எண்ணும் இல்லாததால் மக்கள் என்ன செய்வதென தெரியாமல் தவிக்கின்றனர். கவனிக்குமா மெட்ரோ நிர்வாகம்?
2023இல் கர்நாடகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க மைசூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இதற்கான கட்டணத்தில் ₹80 லட்சம் நிலுவைத் தொகையை ஓராண்டாக செலுத்தவில்லை. இதனால், வாடகை பாக்கி தொகையை விடுவிக்கக் கோரி கர்நாடகா வனத்துறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு, கர்நாடக அரசுதான் செலவை ஈடு செய்ய வேண்டும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக மேலிடத்துக்கு நெருக்கமான ஒருவரை பிரசாந்த் கிஷோர் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக தனி மெஜாரிட்டி பெறவில்லையெனில், அக்கட்சி மத்தியில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறியதாகவும், இதற்கு தேர்தல் முடிவுக்கு பிறகு பார்க்கலாம் என திமுக தரப்பில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தெரியவர திமுக மீது காங்கிரஸ் கட்சி தற்போது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில், இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. துருக்கிக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்தியா சார்பாக ஜோதி, அதிதி, பர்னீத் ஆகியோர் களமிறங்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஒரு செட்டை கூட விட்டுக் கொடுக்காமல் 232-226 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கியை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து 3ஆவது முறையாக உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை கடந்த சில நாள்களாக அமைதி காக்கிறார். இதற்கு உள்கட்சி பிரச்னை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் முடிவு INDIA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுவதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் ரிசல்ட் வரும்வரை அமைதி காக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 -12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேர்ந்த 2.73 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், 1,26,637 மகளிருக்கு ₹1,047 கோடி திருமண நிதியுதவி, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ₹1,500 போன்ற பல்வேறு திட்டங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
ப்ளே-ஆஃப்பில் RCB அணியை வீழ்த்திய எந்த அணியும், ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆம், ▶2010இல் MI அணி CSK-விடம் இறுதிப் போட்டியில் தோற்றது. ▶2015இல் CSK அணி இறுதிப் போட்டியில் MI இடம் தோற்றது. ▶2020இல் SRH அணி Qualifier 2இல் DC இடம் தோற்றது. ▶2021இல் KKR அணி இறுதிப் போட்டியில் CSK இடம் தோற்றது. ▶2022இல் RR அணி இறுதிப் போட்டியில் GT இடம் தோற்றது. ▶2024இல் RR அணி Qualifier 2இல் SRH இடம் தோற்றது.
ரெமல் புயல் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கி. மீ. வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும், 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சூறாவளி 90-120 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மத்தியில் 2014 முதல் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்த 10 ஆண்டுகளிலும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், ரயில்வே உள்ளிட்டவற்றில் வட இந்தியர்கள் அதிகம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் இருந்து தமிழகம் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புக்காக வந்தபோதிலும், அவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.